கொரோனா தடுப்பூசி தொடர்பாக மதத்தின் பெயரால் வதந்தி பரப்புவோர் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக பா.ஜ.க-வின் மாநில செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி கூறியிருக்கிறார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், “நாட்டில் ஒரே ஆண்டில் 157 கோடிக்கும் அதிகமான கொரோனா தடுப்பூசிகளை செலுத்தியிருக்கிறோம். கொரோனா தடுப்பூசியில் இந்தியா, உலகுக்கே வழிகாட்டியாகத் திகழ்கிறது. இதற்கு, பிரதமர் மோடியே காரணம். நோய் பரவல் அதிகரித்திருந்தாலும்கூட தடுப்பூசி செலுத்தியதால்தான் உயிரிழப்புகள் ஏற்படவில்லை. தி.மு.க ஆட்சிக்கு வந்ததும், தடுப்பூசி கிடைக்கவில்லை என்பது போல பிரசாரம் செய்தது.
இதுவரை தமிழகத்தில் 8.98 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இதற்கு தி.மு.க-வினர் என்ன பதில் சொல்லப் போகிறார்கள்? தூத்துக்குடியைச் சேர்ந்த மோகன் சி.லாசரஸ் என்பவர், கிறிஸ்தவ மக்களிடம் தடுப்பூசி செலுத்திகொள்ளக்கூடாது என்றும், செலுத்தினால் பல பிரச்னைகள் உருவாகும் என்றும் தவறாக வதந்தி பரப்புகிறார். தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் எடுக்கும் நடவடிக்கைக்கு மக்களைத் தூண்டிவிடும் வகையில் பேசி வருவது கண்டிக்கத்தக்கது.
மதத்தின் பெயரால் வதந்தி பரப்புவது உயிரை பலி கொடுப்பதற்குச் சமம். எனவே, வதந்தி பரப்புவோர் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார். தன்னுடைய இதே கருத்தை அவர் தன் ட்விட்டர் பக்கத்திலும் பதிவிட்டிருக்கிறார். நாராயணன் திருப்பதியின் இந்த குற்றச்சாட்டு சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. இந்த நிலையில், இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்டம் நாலுமாவடியில் உள்ள இயேசு விடுவிக்கிறார் ஊழியங்களின் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சாந்தகுமாரிடம் பேசினோம். “மதுரை மாவட்டம் கல்மேடு பகுதியைச் சேர்ந்த நாகராஜ் என்பவரின் மகள் ஜோதிகாவுக்கு காய்ச்சல், சளி இருந்ததால் அரசு மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை மேற்கொண்டுள்ளார். அதில், அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா வந்து குடும்பத்துடன் அவதிப்படுவதை விட விஷம் குடித்து குடும்பத்துடன் இறந்து விடலாம் என்று தற்கொலைக்கு முயன்றுள்ளனர். இதில், இரண்டு பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் குறித்த செய்தி கடந்த ஜனவரி 10-ம் தேதி நாளேடுகளில் வெளியானது. அதைத் தொடர்ந்து அடுத்த சில நாள்களில் வீடியோவில் இயேசு விடுவிக்கிறார் ஊழியங்களின் நிறுவனர் மோகன் சி.லாசரஸ், “கொரோனா வந்துவிடுமோ என பயந்து மதுரையில் ஒரு குடும்பமே தற்கொலைக்கு முயன்றுள்ளது. அனைவரும் முதலில் அச்ச உணர்வை தூக்கி எறிய வேண்டும். ஆண்டவரிடம் ஜெபம் செய்யுங்கள்.
அச்ச உணர்வே எல்லாவற்றுக்கும் காரணம்” என்றுதான் பேசினார். எங்களது ஊழிய அலுவலகத்தில் பணிபுரியும் 300-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் அனைவருமே இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டிருக்கிறோம். கொரோனா நிவாரண நிதியாக இதுவரை ஒன்றரை கோடி ரூபாய் வரை தமிழக அரசிடம் அளித்துள்ளோம்.
கொரோனா தடுப்பு மருத்துவ உபகரணங்களுக்காக ரூ.30 லட்சம் நிதியை தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அளித்துள்ளோம். தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள். கொரோனாவை நினைத்து அச்சபட வேண்டாம் என்றுதான் சார் பேசியிருக்கிறார். அவர் பேசிய வீடியோ சில வார்த்தைகள் எடிட்செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. அவர் கருத்து தவறாக திரிக்கப்பட்டுள்ளது. பா.ஜ.க செய்யும் அரசியலுக்குள் நாங்கள் செல்ல விரும்பவில்லை” என்றார்.
- இன்று உலக தண்ணீர் தினம்… நீரின்றி அமையாது உலகு‘நீரின்றி அமையாது உலகு’ என்பது வள்ளுவர் வாக்கு. மக்கள் மட்டுமல்ல, பூமியில் உள்ள அனைத்து உயிரினங்களும் […]
- சங்கரன்கோவில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாபெரும் கோலப்போட்டி..!தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் மற்றும் மகளிர் தினத்தை […]
- இன்று ஒளிமின் விளைவுகளை கண்டறிந்த இராபர்ட் மில்லிகன் பிறந்த தினம்ஒளிமின் விளைவு தொடர்பான ஆராய்ச்சி மேற்கொண்ட, நோபல் பரிசு வென்ற அமெரிக்க இயற்பியலறிஞர், இராபர்ட் மில்லிகன் […]
- “சண்டை காட்சிகளில் நடிப்பவர்களுக்குக் காப்பீடு வேண்டும்” – நடிகை சனம் ஷெட்டி கோரிக்கை!புகழேந்தி புரொடக்சன்ஸ் எனும் பட நிறுவனம் மூலம் திருமதி தமிழரசி புலமைப்பித்தன் தயாரித்து வெளியிடும் திரைப்படம் […]
- விருதுநகரில் ‘பி.எம்.மித்ரா ஜவுளிபூங்கா’ : இன்று ஒப்பந்தம் கையெழுத்து..!விருதுநகரில் ‘பி.எம்.மித்ரா ஜவுளிபூங்கா’ அமைப்பதற்கான ஒப்பந்தம் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய அமைச்சர் பியூஷ்கோயல் முன்னிலையில் […]
- மதுரை திருமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழைதிருமங்கலம், கள்ளிக்குடி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை 45 நிமிடங்களுக்கு மேலாக இடி, மின்னலுடன் […]
- வட்டாட்சியருக்கு கொலை மிரட்டல் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் உட்பட 7 பேர் மீது வழக்குவட்டாட்சியர் அலுவலகத்திற்குள் நுழைந்து வட்டாட்சியருக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் பஞ்சாயத்து தலைவர் உட்பட ஏழு […]
- விவேகானந்தர் மண்டபம் படகு போக்குவரத்து கட்டண உயர்வை – சிபிஎம் கட்சியினர் மனுகன்னியாகுமரி கடல் நடுவே உள்ள சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை பாறைக்கு […]
- அக நக முக நகையே..’ வந்தியத்தேவன்-குந்தவையின் அழகான காதல் பாடல் வெளியானதுலைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரிக்கும் மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்–2’ திரைப்படம் வரும் […]
- ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு தீவிர சிகிச்சை..,அதிர்ச்சியில் காங்கிரஸ் தொண்டர்கள்..!சமீபத்தில் நடைபெற்ற ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ.வான ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு […]
- தமிழக ஆளுநரின் கருத்துக்கு மறுப்பு தெரிவித்த மத்திய அரசு..!ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் இல்லை என தமிழக ஆளுநர் கூறிவந்த […]
- குறள் 407நுண்மாண் நுழைபுலம் இல்லான் எழில்நலம்மண்மாண் புனைபாவை யற்று. பொருள் (மு.வ): நுட்பமானதாய் மாட்சியுடையதாய் ஆராய வல்லவான […]
- அக்சய் குமார் நடிக்கும் ‘புரொடக்ஷன் 27’ படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்புதமிழில் சூர்யா நடித்து டிஜிட்டல் தளத்தில் வெளியான ‘சூரரைப் போற்று’ திரைப்படத்தின் பெயரிடப்படாத இந்தி பதிப்பின் […]
- உச்ச நடிகையாக மாற்றம் கண்டுவரும் ஐஸ்வர்யா மேனன்தமிழ் படம் 2’ எனும் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடத்தில் பிரபலமானவர் நடிகை ஐஸ்வர்யா மேனன். […]
- தூத்துக்குடியில் களவு போன 13 சவரன் தங்க நகைகள் மீட்புதூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வீடு புகுந்து தங்க நகைகளை திருடிய வழக்கில் […]