• Thu. Apr 25th, 2024

நாகர்கோவில் – சென்னை ரயில் சேவை மாற்றம்

Byகாயத்ரி

Jan 18, 2022

சென்னை எழும்பூர் பணிமனையில் பராமரிப்புப் பணி நடைபெறுவதால், நாகர்கோவில் – சென்னை வாராந்திர விரைவு ரயில் சேவையில் மாற்றம் செய்யப்படவுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது; நாகர்கோவில் சந்திப்பில் இருந்து சென்னை எழும்பூருக்கு வெள்ளிக்கிழமைகளில் (ஜனவரி 21, 28, பிப்ரவரி 4, 11, 18, 25 ஆகிய தேதிகளில்) மாலை 4.15 மணிக்கு இயக்கப்படும் வாராந்திர அதிவிரைவு ரயில் (வண்டி எண்:12668) தாம்பரம் வரை மட்டும் இயக்கப்படும்.

அதேபோல், சென்னை எழும்பூரில் இருந்து நாகர்கோவிலுக்கு வியாழக்கிழமைகளில் (ஜனவரி 20, 27, பிப்ரவரி 3, 10, 17, 24, மார்ச் 3 ஆகிய தேதிகளில்) இரவு 6.55 மணிக்கு இயக்கப்படும் வாராந்திர அதிவிரைவு ரயில் (வண்டி எண்: 12667) எழும்பூர் – தாம்பரம் இடையே பகுதி ரத்து செய்யப்படவுள்ளது. மேற்குறிப்பிட்ட நாட்களில், இந்த ரயில் தாம்பரத்தில் இருந்து இரவு 7.30 மணிக்கு நாகர்கோவிலுக்கு இயக்கப்படும்’ என்று தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *