தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் ஆணைக்கிணங்க வேலூர் மாவட்ட திமுக அலுவலகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான விருப்ப மனு அளித்தார்கள்.
இதைத் தொடர்ந்து நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான நேர்காணல் வேலூர் மாவட்ட செயலாளர் ஏ.பி.நந்தகுமார் அணைகட்டு சட்டமன்ற உறுப்பினர் தலைமையில் நடைபெற்றது.
இதில் மாவட்ட அவைத்தலைவர், முன்னாள் எம்.பி. தி.அ.முகமது சகி, மாநகர செயலாளர் ப.கார்த்திகேயன் எம்.எல்.ஏ, வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி.எம்.கதிர் ஆனந்த், மாவட்ட பொருளாளர் சி.நரசிம்மன், மாவட்ட துணை செயலாளர்கள் ஆர்.பி.ஏழுமலை, மலர்விழி லோகநாதன், பாண்டியன் ஆகியோர் உடன் இருந்தனர்.