• Fri. Aug 14th, 2026
WhatsAppImage2026-08-13at1759153
previous arrow
next arrow
Read Now

இன்று பக்தர்களுக்கு இலவசமாக நீர்மோர் வழங்கப்பட்டது.

Byதரணி

Mar 15, 2024

இன்று, திண்டுக்கல்லில் உள்ள உலகப் புகழ் பெற்ற, தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறைக்கு உட்பட்ட, தாடிக்கொம்பு அருள்மிகு சௌந்தரராஜப் பெருமாள் திருக்கோயிலில் பக்தர்களுக்கு இலவசமாக நீர்மோர் வழங்கப்பட்டது. இதனை அறங்காவலர் குழு தலைவர் ம.தீ.விக்னேஷ்பாலாஜி மற்றும் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் ஈஸ்வரி ஸ்டோர் உரிமையாளர் வாசுதேவன், சுசீலா ராஜூ, கேப்டன் பிரபாகரன், இராமுனுஜம் திருக்கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு இலவசமாக நீர்மோர் வழங்கினார்கள். இதனை செயல் அலுவலர் சீனிவாசன் மற்றும் திருக்கோயில் பட்டாச்சாரியார்கள் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் ஏற்பாடு செய்தனர்.