சிவகங்கை மாவட்டம் நகர் பகுதியில் தேசிய ஜன நாயக கூட்டணி வேட்பாளர் தேவ நாதன் யாதவ் காந்தி வீதி தொடங்கி இளையான்குடி சாலைவரையில் குழுமி இருந்த மக்களிடம் வாக்கு சேகரித்தார்.
அப்போது பேசிய அவர்..,
கடந்த 10 ஆண்டுகளில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு தீவிரவாத்தை அடியோடு ஒடுக்கப்பட்டுள்ளதாகவும் இந்த நிலை தொடர்ந்து நீடிக்கவும் மக்களுக்கு நிலையான பல திட்டங்கள் கிடைத்திட தாமரை சின்னத்திற்கு வாக்களிப்பீர் என்று கேட்டுக் கொண்டார்.
24 மணி நேரம் இயங்க க்கூடிய பாராளுமன்ற உறுப்பினர் அலுவலகம் திறக்கப்படும்
சிவகங்கையில் பல சுற்றுலாதளங்களை மேம்படுத்தப்படும், சட்டமன்றதொகுதிக்கு ஒன்றுவீதம் தொழிற்சாலை உருவாகப்படும் என்றார்.