• Wed. May 6th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

கேரளாவில் “கட் அவுட்” காய்ச்சல் தொடங்கியுள்ளது

ByA.Tamilselvan

Nov 10, 2022

2-வது சீசன் உலகக்கோப்பை தொடங்க இன்னும் 11 நாட் களே உள்ள நிலையில், இந்தியா வில் கால்பந்துக்கென கிளைமேக்ஸ் உள்ள இடமான கேரளாவில் “கட் அவுட்” காய்ச்சல் தொடங்கியுள் ளது.
மலையாள கால்பந்து ரசிகர்கள் இம்முறை ஆற்றின் நடுவில் கட் அவுட்களை வைத்து கால்பந்து உலகை இந்தியா பக்கம் திரும்பி பார்க்க வைத்துள்ளனர். அதுவும் சில இடங்களில் கட் அவுட் வைக்க மோத லும் ஏற்பட்டுள்ளது. மோதலுக்கு கார ணம் அர்ஜெண்டினா, பிரேசில், போர்ச்சுக்கல் ஆகிய மூன்று அணி களால் கேரள ரசிகர்கள் பிரிந்துள்ளது தான். அர்ஜெண்டினா கோஷ்டி மெஸ் ஸியின் கட்அவுட்டை வைக்கவும், பிரேசில் கோஷ்டி நெய்மாரின் கட் அவுட்டை வைக்கவும், போர்ச்சுக்கல் கோஷ்டி ரொனால்டோவின் கட்அவுட்டை வைக்கவும், முட்டி மோதி வருகின்றனர். இவர்களின் கட் அவுட் சேட்டையால் கேரள ஆறுகள் படாத பாடுபடுகிறது.