
அமெரிக்க அதிபர் ஜோபைடனின் மனைவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது. அந்நாட்டில் மொத்தம் 9,47,88,022 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 10,62,770 பேர் உயிரிழந்துள்ளனர்.இந்த நிலையில், அமெரிக்காவின் முதல் பெண்மணி ஜில் பைடனுக்கு கொரோனாவுக்கான லேசான அறிகுறிகள் கானப்பட்டது. இதையடுத்து அவர் பரிசோதனை மேற்கொண்டபோது அவருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. அவரது கணவவரும் அதிபருமான ஜோ பைடன் இரண்டாவது முறையாக வைரஸால் பாதிக்கப்பட்ட இரண்டு வாரங்களுக்குப் பிறகு, தற்போது அவரின் மனைவிக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
