மேற்கு வங்காள மாநிலத்தில் அரசு ஊழியர்களை மிரட்டும் நோக்கத்தில் அமைச்சர் ஒருவர் பேசியது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
மேற்கு வங்கத்தில் நிலுவையில் உள்ள அகவிலைப்படியை வழங்கக் கோரியும், ஒப்பந்த பணியிடங்களை நிரந்தரமாக்கக் கோரியும் மாநில அரசு ஊழியர்களின் கூட்டு மன்றம் நேற்று முன்தினம் பெரிய அளவில் ஆர்ப்பாட்டம் நடத்தியது. இந்நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வும், அம்மாநில அமைச்சருமான உஜ்ஜல் பிஸ்வாஸ் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசுகையில், மம்தா பானர்ஜியை தவறாக பேசினால் உங்கள் நாக்கை பிடுங்குவோம் என்று பணியாளர்களை மிரட்டியுள்ளார். இது தொடர்பான வீடியோ ஆன்லைனில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அந்த வீடியோவில் உஜ்ஜல் பிஸ்வாஸ், அவர்கள் (பணியாளர்கள்) பள்ளிக்கு வருகிறார்கள், வேலை செய்யவில்லை ஆனால் இன்னும் சம்பளம் பெறுகிறார்கள். உங்கள் ஆர்ப்பாட்டத்தை பொதுமக்கள் முன் காட்ட விரும்புகிறீர்களா? கவலைப்பட வேண்டாம், நாங்கள் (மேற்கு வங்க அரசு) நீங்கள் எங்களுக்கு எதிராக போராட்டம் நடத்த முடியாது என்பதை உறுதிப்படுத்த தயாராக இருக்கிறோம். மம்தா பானர்ஜியை தவறாக பேசினால் உங்கள் நாக்கை பிடுங்குவோம். இனிமேல் அதுதான் வழக்கமாக இருக்கும் என்று பேசியுள்ளார்.
மேற்கு வங்க அமைச்சரின் மிரட்டலை குறிப்பிட்டு முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான அம்மாநில அரசை பா.ஜ.க. விமர்சனம் செய்துள்ளது. பா.ஜ.க.வின் ஐ.டி. பிரிவு தலைவர் அமித் மால்வியா டிவிட்டரில், மம்தா பானர்ஜியின் கீழ் மேற்கு வங்கம் ஒரு மூன்றாம் தர சர்வாதிகாரத்தை ஒத்திருக்கிறது. அங்கு வன்முறை மற்றும் எதிர்ப்பு குரல்களை அழிப்பது இப்போது வழக்கமாக உள்ளது. தேர்தலுக்கு பிந்தைய மிகக் கொடூரமான வன்முறை, பல கற்பழிப்பு மற்றும் கொலைகள், அரசால் நடத்தப்பட்ட வகுப்புவாத கலவரங்கள் மற்றும் மோசமான சம்பவங்களை மாநிலம் கண்டுள்ளது என்று பதிவு செய்துள்ளார்.
- மின் கட்டண உயர்வு இல்லை – மின்சார வாரியம் விளக்கம்மின்சாரவாரியம் வெளியிட்டுள்ள தகவலின் படி வீட்டு இணைப்புகளுக்கு எவ்வித கட்டணம் உயர்வும் இல்லை , இலவச […]
- ஊட்டி மலை ரயில் விபத்து… பயணிகளுக்கு பாதிப்பில்லைஊட்டி மலை ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.விபத்தில் பயணிகளுக்கு பாதிப்பில்லை என தகவல் வெளியாகியுள்ளதுஒடிசா மாநிலம் […]
- தென்மேற்கு பருவமழை தொடங்கியது – வானிலை ஆய்வு மையம்தென்மேற்கு பருவமழை கேரளா பகுதிகளில் இன்று தொடங்கி உள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள […]
- திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் உண்டியல் எண்ணும் பணிதிருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோவிலில் சித்திரை மாதம் உண்டியல் எண்ணும் பணி நடைபெற்றது. மதுரை மாவட்டம் […]
- ஆளுநர் அவராக பேசுகிறாரா..யாரும் அறிக்கை அனுப்பி பேச சொல்கின்றனரா – செல்லூர் ராஜூ பேட்டிஆளுநர் ஆர்.என்.ரவியின் அரசியல் கருத்துகளை ஏற்க முடியாது என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.ஆளுநர் […]
- ‘லிவ் இன்’ காதலுடன் வசித்துவந்த பெண் உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்டு கொலைலிவ் இன் காதலுடன் வசித்துவந்த பெண் படுகொலை செய்யப்பட்டுள்ளார். அவரது உடல் துண்டு துண்டாக வெட்டப்படுள்ளது.மராட்டிய […]
- உமா மகேஸ்வரி சமேத மணிகண்டேஸ்வரர் கோவிலில் பாலாலயம்கீழமாத்தூர் உமா மகேஸ்வரி சமேத மணிகண்டேஸ்வரர் கோவிலில் பாலாலயம் நடைபெற்றது.மதுரை மாவட்டம் கீழமாத்தூர் கிராமத்தில் அமைந்துள்ள […]
- இலக்கியம்நற்றிணைப் பாடல் 182: நிலவும் மறைந்தன்று இருளும் பட்டன்றுஓவத்து அன்ன இடனுடை வரைப்பின்பாவை அன்ன நிற் […]
- படித்ததில் பிடித்ததுசிந்தனைத்துளிகள் ஒரு டீச்சர் தன் வகுப்பு மாணவர்களிடம் வெற்றுத் தாள்களைக் கொடுத்து, ஒவ்வொருவரையும், வகுப்பில் உள்ள […]
- பொது அறிவு வினா விடைகள்
- இன்று மனிதர்களுக்கு தூய காற்று, ஊட்ட மிகு உணவு வழங்கும் உலகப் பெருங்கடல்கள் நாள்நாம் சுவாசிக்கும் தூய காற்றையும், ஊட்ட மிகு உணவையும் வழங்கும் கடல்கள் – உலகப் பெருங்கடல்கள் […]
- இன்று சனிக்கோளின் நான்கு நிலாக்களை கண்டுபிடித்த ஜியோவன்னி டொமினிகோ காசினி பிறந்த நாள்சனிக்(காரிக்)கோளின் நான்கு துணைக்கோள்களைக் கண்டறிந்த ஜியோவன்னி டொமினிகோ காசினி பிறந்த நாள் இன்று (ஜூன் 8, […]
- மேகதாது அணை கட்டப்பட்டால் தமிழகம் பஞ்சப்பிரதேசமாக ஆக்கப்படும் – வைகோ பேட்டிமேகதாது அணை தமிழ்நாட்டிற்கு பெரும் கேடாக முடியும், கபினி,கிருஷ்ணராஜ சாகரிலிருந்து தண்ணீர் வந்து சேராமல் தமிழகம் […]
- திருப்பதியில் வெளியிடப்பட்ட ‘ஆதி புருஷ்’ படத்தின் பிரத்யேக முன்னோட்டம்நடிகர் பிரபாஸ் நடிப்பில் தயாராகி இருக்கும் ‘ஆதி புருஷ்’ படத்தின் பிரத்யேக முன்னோட்டம் ஆன்மீக தலமான […]
- திமுக ஆட்சி என்றாலே, அது இருட்டாட்சி- ஒபிஎஸ்திமுக ஆட்சி என்றாலே, அது இருட்டாட்சி, காட்டாட்சி என்றுதான் பொருள். இன்று தமிழ்நாட்டில் எல்லா வகையிலேயும் […]