சென்னை எழும்பூர் மருத்துவமனையில் அடுத்தடுத்து 100 குழந்தைகள் காய்ச்சல் காரணமாக அட்மிட் செய்யப்படுவதால் மருத்துவர்கள் அதிச்சியடைந்துள்ளனர்.
சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் இன்று ஒரே நாளில் 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் காய்ச்சலால் (இன்ஃப்ளுயென்சா வைரஸ்) அனுமதிக்கப்பட்டுள்ளதால் மருத்தவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதிகளவில் குழந்தைகள் அனுமதிக்கப்படுவதால் மருத்துவமனை படுக்கைகள் வேகமாக நிரம்புகின்றன. காய்ச்சல் 3-4.நாட்களில் குறைந்தாலும் இருமல் 2 வாரங்களுக்கு நீடிக்கிறது. இருமலுக்கு மருந்து கொடுத்தாலும் அது உடனே சரியாவது இல்லை என மருத்துவர்கள் கூறகின்றனர்.