• Fri. Mar 29th, 2024

இலங்கை தமிழர்களுக்காக நிரந்தர குடியிருப்புகள்- முதல்வர் திறந்து வைத்தார்

ByA.Tamilselvan

Sep 14, 2022

தமிழகத்தில் முதல்முறையாக திண்டுக்கல் மாவட்டத்தில் இலங்கை தமிழர்களுக்கான நிரந்த குடியிருப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
திண்டுக்கல் மாவட்டத்தில் முதல் முறையாக இலங்கை தமிழர்களுக்காக அனைத்து வசதிகளுடன் மறுவாழ்வு முகாம் இன்று தொடங்கி வைக்கப்பட்டது. இதனை முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொளி மூலம் புதிய குடியிருப்புகளை தொடங்கி வைத்தார். இந்த வீடுகள் தோட்டனூத்து, அடியனூத்து, கோபால்பட்டியில் உள்ள முகாம்களை ஒருங்கிணைத்து கட்டப்பட்டுள்ளன. மேலும், உள்கட்டமைப்பு வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. ரூ.17.84 கோடி செலவில் தலா 300 சதுர அடியில் 321 குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *