தமிழ்நாடு காவல்துறை மற்றும் பெண் காவலர்கள் குறித்து சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பியதாக கூறப்படும் விவகாரத்தில் யூடியூபர் சவுக்கு சங்கரை கோவை சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர்.
காவல் துறை அதிகாரிகள் குறித்தும், பெண் காவலர்கள் குறித்தும் அவதூறாக சமூகவலைதளங்களில் பேசிய விவகாரத்தில் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தேனியில் தனியார் விடுதியில் தங்கியிருந்த சவுக்கு சங்கரை கைது செய்த கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் அவரை கோவை அழைத்து சென்றனர்.