• Sun. Jun 21st, 2026
WhatsAppImage2026-06-18at2309102
previous arrow
next arrow
Read Now

பாலமுருகன் ஆலயத்தில் சித்ரா பௌர்ணமி மகோத்ஸவ பெருவிழா..,

ByM.JEEVANANTHAM

May 2, 2026

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா வழுவூர் கிராமம் வளையாம்பட்டினத்தில் அருள்மிகு பாலமுருகன் ஆலயம் உள்ளது. இவ்வாலயத்தின் 42 ஆம் ஆண்டு சித்ரா பௌர்ணமி மகோத்ஸவ பெருவிழா நடைபெற்று வருகிறது.

கடந்த 22 ஆம் தேதி முதல் யாகசாலை பூஜைகள் துவங்கி நடைபெற்று வரும் நிலையில் இன்று திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமி ஆலய மண்டபத்தில் எழுந்தருள செய்யப்பட்டு ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. தொடர்ந்து காப்பு கட்டி மாலை மாற்றுதல் கன்னியாதானம் செய்யப்பட்ட திருக்கல்யாண வைபவத்தில் மாங்கல்யதாரணம் நடைபெற்றது. தொடர்ந்து மகா தீபாராதனை சோடசதீபாரதனை செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். விழாவில் பங்கேற்றவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

விழாவின் சிகர நிகழ்வாக வருகின்ற 30 மே 1ஆம் தேதி சூர்ணோ உற்சவம், தீர்த்தவாரி நடைபெற்று, வழுவூர் கீழவீதியில் இருந்து அலகு காவடிகள், பால்குடங்கள், வானவேடிக்கையுடன் தப்பாட்டம், கரகாட்டம், போன்ற கிராமிய கலை நிகழ்ச்சிகளுடன் வீரதீர போர்க்கலைகளுடன் காவடிகள் உலா நடைபெற்றது .