தமிழக போலீசாரை குற்றம்சாட்டிவரும் அண்ணாமலைக்கு பதிலடியாக போலீசாரை நேரில் அழைத்து தமிழக முதல்வர் பாராட்டியுள்ளார்.
கோவை கார் சிலண்டர் வெடிப்பு சம்பவத்தில் சிறப்பாக செயல்பட்ட 14 போலீசாரை நேரில் அழைத்து பாராட்டி அவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் சான்றிதழ் வழங்கினார். கோவை விவகாரத்தில் போலீசார் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை சுமத்தி மெத்தனமாக செயல்பட்டதாக அண்ணாமலை விமர்சித்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தனது கட்டுபாட்டில் இருக்கும் காவல்துறையை முதல்வர் பாராட்டியுள்ளார்.