கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்.
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில மாநாடு கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் செப்டம்பர் 30-ந்தேதி (நேற்று) தொடங்கி இம்மாதம் 3-ந் தேதி வரை நடைபெறுகிறது. இந்த மாநாட்டின் ஒரு அங்கமாக, ‘கூட்டாட்சி மற்றும் மத்திய-மாநில உறவு” என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெறுகிறது. இந்த கருத்தரங்கில் பங்கேற்பதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 11.30 மணிக்கு திருவனந்தபுரத்திற்கு விமானத்தில் புறப்பட்டு செல்கிறார். அங்கு 4 மணிக்கு நடைபெறும் அந்த கருத்தரங்கில் அவர் பங்கேற்கிறார். அந்த கருத்தரங்கில் கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனும், தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும் முக்கிய உரை ஆற்றுகின்றனர். அந்த நிகழ்ச்சியை முடித்துவிட்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னைக்கு திரும்புகிறார்.