அமைச்சர் மெய்யநாதனின் உடல்நிலை சீரானதை அடுத்து அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
ராமேஸ்வரத்தில் இருந்து சென்னை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் அமைச்சர் மெய்யநாதன் நேற்று பயணம் செய்தார். புதுக்கோட்டை ரெயில் நிலையத்தில் ஏறிய அமைச்சர் மெய்யநாதனுக்கு பயணத்தின்போது ரத்த அழுத்தம் காரணமாக திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. சிதம்பரம் ரெயில் நிலையத்தில் இறங்கிய அமைச்சர் மெய்யநாதன் கடலூரில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். . இந்நிலையில், அமைச்சர் மெய்யநாதனின் உடல்நிலை சீரானதை அடுத்து அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.