• Fri. Apr 26th, 2024

சென்னை ஓபன் மகளிர் டென்னிஸ்: இன்று இறுதிப்போட்டி

ByA.Tamilselvan

Sep 18, 2022

சென்னை ஓபன் மகளிர் டென்னிஸ் இன்று இரவு 7 மணிக்கு இறுதிபோட்டி . தமிழ்நாடு டென்னிஸ் சங்கம் சார்பில் தமிழக அரசு ஆதரவுடன் சென்னை ஓபன் சர்வதேச மகளிர் டபிள்யூ.டி.ஏ. டென்னிஸ் போட்டி நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.டி.ஏ.டி. மைதானத்தில் நடைபெற்று வருகிறது. நேற்று நடந்த அரையிறுதி ஆட்டம் ஒன்றில் இந்தப் போட்டியில் 3-வது வரிசையில் உள்ள மக்டா லினெட் (போலந்து)- கேத்தே சுவான் (இங்கிலாந்து) மோதினார்கள். இதில் லினெட் 3-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தபோது கேத்தே காயத்தால் விலகினார். இதனால் மக்டா லினெட் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. மற்றொரு அரையிறுதியில் லிண்டா புருவர்தோவா (செக்குடியரசு) 5-7, 6-2, 6-4 என்ற செட் கணக்கில் நாடியா போடோரோவை (அர்ஜென்டினா) கடும் போராட்டத்துக்கு பிறகு வீழ்த்தினார். இன்று இரவு 7 மணிக்கு நடைபெறும் இறுதி போட்டியில் மக்டா லினெட் (போலந்து) லிண்டா (செக்குடியரசு) மோதுகிறார்கள். 3-ம் நிலை வீராங்கனையான மக்டா லினெட் இதுவரை 2 டபிள்யூ. டி.ஏ. பட்டத்தை பெற்றுள்ளார். சென்னை ஓபன் போட்டியில் வெற்றி பெற்று அவர் 3-வது பட்டத்தை வெல்வாரா? என்று ஆர்வத்துடன் எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *