திமுக அரசின் செயல்பாடுகளை பார்த்து இன்னும் 4 ஆண்டுகளுக்கு மக்கள் பொறுக்க மாட்டார்கள் என்றும், விரைவில் தமிழகத்தில் மாற்றம் வரும் எனவும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பேசியுள்ளார்.
மதுரை மாநகராட்சியில் அதிமுக சார்பில் போட்டியிடும் 100 வேட்பாளர்களுக்கு வாக்கு கேட்டு அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பழங்காநத்தம் பகுதியில் பிரச்சாரம் செய்தார்.
ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில், ‘ஆட்சிக்கு வந்தவுடன் நீட் ரத்து முதல் கையெழுத்து என்றார் ஸ்டாலின். நீட் ரத்துக்கு கையெழுத்து போடும் அதிகாரம் உள்ளவர் ஜனாதிபதி தான். ஆனால், ஸ்டாலின் பத்து மாதமாக கையெழுத்து போட்டுக் கொண்டு இருக்கிறார். நீட் ரத்தாகவில்லை. மகளிருக்கு 1000 ரூபாய் தருவதாக சொல்லி ஏமாற்றி விட்டார்கள். நகைகடன் தள்ளுபடி விவகாரத்தில், 35 லட்சம் மக்களை ஏமாற்றி விட்டது திமுக அரசு. பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதிலும், நிதியை வழங்காமல், தரமற்ற பொருட்களை வழங்கியும் ஏமாற்றி விட்டார்கள்.
இதையெல்லாம் பார்த்து இன்னும் 4 ஆண்டுகள் மக்கள் பொறுக்க மாட்டார்கள். உறுதியாக மாற்றம் வரும், விரைவில் புரட்சி ஏற்படும். திமுக அரசை வீட்டுக்கு அனுப்பும் வரை மக்கள் ஓய மாட்டார்கள். பத்து மாதங்களாக மக்களுக்கு எதுவும் செய்யவில்லை. இவ்வளவு குறுகிய காலத்திலேயே மக்களிடம் பெரும் வெறுப்பை சம்பாதித்தது திமுக அரசு தான்.
பிரச்சார கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசுகையில், கொலை நகரமாக இருந்த மதுரையை கோவில் நகரமாகவே மாற்றிக் காட்டியது அதிமுக ஆட்சி. எடப்பாடி பழனிச்சாமி கேள்விகளுக்கு பதில் சொல்ல திராணி இல்லாமல் காணொளி காட்சி வாயிலாக பரப்புரை மேற்கொள்கிறார் முதல்வர்.
பொங்கல் பரிசு தொகுப்பு முறையாக வழங்கப்படவில்லை. அதில், ரேஷன் கடையில் கொடுத்த மண்டவெல்லம் வீட்டிற்கு வந்த போது காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் அளித்தோம்.
பொங்கல் பரிசை கூட சரியாக கொடுக்க முடியாத அரசை தான் இன்று முடக்க வேண்டும் என்று சொல்கிறோம்.
முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசுகையில், சட்டமன்றத்தை முடக்கி பாருங்கள் என உதயநிதி ஸ்டாலின் சவால் விடுகிறார். அப்படியெல்லாம் சவால் விடாதீர்கள் தம்பி, ஏற்கனவே இரண்டு முறை திமுக ஆட்சி கலைக்கப்பட்டு உள்ளது.
தம்பி உதயநிதி உங்களுக்கு தெரியாது, ஆட்சி கலைக்கப்பட்ட பிறகு திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்ததே கிடையாது. இப்போது பிரதமராக மோடி இருக்கிறார். ஏதாவது பேசி உங்கள் அப்பா ஸ்டாலின் ஆட்சிக்கு மோசம் செய்து விடாதே தம்பி. திமுக அரசினர் வாயிலேயே அல்வா, வடை, தோசை எல்லாம் சுடுவார்கள். இது அவர்களின் பாணி. தேர்தல் தோறும் வாக்குறுதிகள் சொல்லி விட்டு எதையும் நிறைவேற்ற மாட்டார்கள். இதையெல்லாம் மனதில் வைத்து, மக்கள் இந்த தேர்தலில் திமுகவினருக்கு அல்வா கொடுக்க வேண்டும்.’ என்றார்!
- கள் விற்பனை செய்தவர்கள் கைது..!மதுரை மாவட்டம், பேரையூர் அருகே கள் விற்பனை செய்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மதுரை மாவட்டம் […]
- திருப்பூர், கோவை, பல்லடம் பகுதியில் திருடிய டூவீலரை மதுரையில் விற்க முயன்ற 2 பேர் கைதுதிருப்பூர், கோவை, பல்லடம் பகுதியில் நூதன முறையில் விலையுயர்ந்த டூவீலரை திருடி., மதுரையில் ஒரிஜினல் RC […]
- ஒடிசா ரயில் விபத்து : உதவிக்கரம் நீட்டிய ரிலையன்ஸ் நிறுவனம்..!ஒடிசா ரயில் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிக்கரம் நீட்ட ரிலையன்ஸ் நிறுவனம் முன்வந்துள்ளது.“பாதிக்கப்பட்டவர்களுக்கு 6 மாதங்களுக்கு கோதுமை […]
- ஆதார் விவரங்களை இலவசமாக மாற்ற 8 நாட்களே உள்ளன!அடிப்படை அடையாள ஆவணமாக கருதப்படும் மிக முக்கியமான ஆவணமாக ஆதார் அட்டை உள்ளது.ஆதாரில் உள்ளிடப்பட்ட தரவு […]
- டைரக்டர் என்.லிங்குசாமி – கனிமொழி எம்.பி திடீர் சந்திப்பு!கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ போட்டி தொகுக்கப்பட்ட ஹைக்கூ புத்தகத்தை கனிமொழி எம்.பியிடம் வழங்கிய […]
- திருப்பரங்குன்றம் அருகே மின்னல் தாக்கி பெண் பலிமதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா கொம்படி கிராமத்த்தில் மின்னல் தாக்கி பெண் பலியான சம்பவம் பெரும் […]
- மதுரை மாநகராட்சி மண்டலம் 5ல் புதிய ஆரம்ப நகர்புற நல்வாழ்வு மையம் திறப்புமதுரை மாநகராட்சி மண்டலம் 5ல் உள்ள 94வது வார்டு மகாலட்சுமி காலணியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஆரம்ப […]
- ஜெயங்கொண்டம் அருகே 83 -84 ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு படித்த மாணவர்கள் சந்திப்புஜெயங்கொண்டம் அடுத்துள்ள மீன்சுருட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில். 83 -84 ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு […]
- கடையநல்லூரில் புதிய ஏ.என்.பி.ஆர் கேமரா இயக்கத்தை காவல் கண்காணிப்பாளர் துவக்கி வைத்தார்கடையநல்லூரில் புதிதாக அமைக்கப்பட்ட ஏ.என்.பி.ஆர் கேமரா இயக்கத்தை திறந்து வைத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் துவக்கி […]
- மதுரை மாநகராட்சி மண்டலம் 4 அலுவலகத்தில் குறைதீர்ப்பு முகாம்மதுரை மாநகராட்சி மண்டலம் 4 அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாம் மேயர் தலைமையில் நடைபெற்றதுமதுரை மாநகராட்சி […]
- அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனம் சார்பில் ஆர்ப்பாட்டம்13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனம் சார்பில் மண்டல அலுவலகம் முன்பாக […]
- நுழைவு தேர்வு இல்லாமல் சென்னை ஐஐடியில் சேரலாம்எந்தவொரு நுழைவுத் தேர்வும் இல்லாமல் சென்னை ஐஐடியில் சேர அற்புதமான ஒரு வாய்ப்பு இருக்கிறது.இந்தியளவில் டாப் […]
- ஆளுநர் ஆர்.என்.ரவியின் பேச்சுக்கு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம்!அத்துமீறி பேசுவதையே வாடிக்கையாக வைத்துள்ளார் ஆளுநர்”நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம்!கல்வியில் சிறந்து விளங்கும் தமிழ்நாட்டை அறிந்தும் […]
- திருமங்கலம் காவல் துணைக் கண்காணிப்பாளர் அலுவலகம் முற்றுகைமதுரை மாவட்டம் திருமங்கலம் காவல் துணைக் கண்காணிப்பாளர் அலுவலகத்தை 200க்கும் மேற்பட்ட கிராம மக்கள் முற்றுகை- […]
- பாரதி கணேஷ் 24 வருடங்கள் கழித்து இயக்கும் குழந்தைகள் படம்விஜயகாந்த், சிம்ரன், கரண் நடித்த ‘கண்ணுபட போகுதய்யா’ படத்தை இயக்கியவர் பாரதி கணேஷ். 1999ம் ஆண்டு […]