தென்மேற்கு அரபிக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை இன்னும் ஓரிரு நாளில் தொடங்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இது காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த மண்டலமாக வலுப்பெற வாய்ப்பு இருப்பதாகவும், அதனை தொடர்ந்து தென்மேற்கு பருவமழை தொடங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கான சமிக்கைகள் தெரிய வந்துள்ளது. இதனால் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.