தமிழகத்தில் வரும் 8 முதல் 3நாட்களுக்கு மிதமான மழை பெய்யவாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது
கடந்த சில நாட்களாக பகல் நேர வெயில் அதிகரித்துள்ள நிலையில் வரும் மார்ச் 8,9,10 ஆகிய நாட்கள் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதே போல தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், காரைக்காலில் 3 நாட்கள் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்; அதிகபட்ச வெப்பநிலை 34, குறைந்தபட்ச 22 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.மார்ச் 15க்கும் மேல் வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.