• Wed. Jul 22nd, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

ஆன்மீகம்

  • Home
  • ராஜபாளையம் ஆண்கள் மட்டும் பங்கேற்கும் வினோத வழிபாடு

ராஜபாளையம் ஆண்கள் மட்டும் பங்கேற்கும் வினோத வழிபாடு

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே கிராமத்து இளைஞர்கள் அனைவரும் கிராமத்தை விட்டு வெளியேறி வனப்பகுதிக்குள் உள்ள குலதெய்வம் கோவிலுக்கு சென்று விடியவிடிய வழிபாடு நடத்தும் திருவிழா நடைபெற்றது. மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இத்திருவிழாவில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர். விருதுநகர் மாவட்டம்…

சுப்ரமணிய சுவாமி கோவிலில் தெப்பத்திருவிழா!

திருப்பரங்குன்றம், சுப்ரமணிய சுவாமி கோவிலில் தெப்பத்திருவிழா ஐந்தாம் திருநாளை முன்னிட்டு, சிறப்பு அபிஷேகம் அலங்காரம் தீபாராதனை நடைபெற்றது. சுப்ரமணியசாமி தெய்வயானையுடன் திருவாட்சி மண்டபத்தினை வலம்வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்! திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்!

விருத்தகிரீஸ்வரர் கோவிலின் அழகிய தோற்றம்!

உலகில் முதன்மையாக தோன்றிய மலை இங்கு புதையுண்டு அழுந்தி உள்ளதாக தலச்சிறப்பு இக்கோவிலுக்கு உண்டு! மாசி மகம் இங்கு சிறப்பாக கொண்டாப்படுகிறது. தல வரலாறு : ஆதியில் பிரம்மன் மண்ணுலகைப் படைக்க எண்ணி முதலில் நீரைப் படைத்தார். திருமால் அப்பொழுது தீயவர்களான…

வெள்ளை யானை வாகனத்தில் சுப்பிரமணிய சுவாமி!

மயிலாடுதுறை மாவட்டம், திருப்புள்ளிருக்குவேளூர் என்றழைக்கப்படும் வைத்தீஸ்வரன் கோவிலில் நேற்று வெள்ளை யானை வாகனத்தில் சுப்பிரமணிய சுவாமி, வள்ளி தெய்வயானையுடன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்! சுவாமிக்கு தீபாரதனை நடைபெற்றது! ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்!

சுப்பிரமணியசாமி சுவாமி கோவிலில் யாகசாலை பூஜைகள்!

திருப்பரங்குன்றம், சுப்ரமணிய சுவாமி கோவிலில், தெப்பத்திருவிழா 5வது நாளை முன்னிட்டு, காலை யாகசாலை பூஜைகள் நடைபெற்றன! சுப்பிரமணியசாமி தெய்வயானையுடன் எழுந்தருளி திருவாச்சி மன்றம் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்! திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்!

விருதகிரீஸ்வரர் கோவிலில் மகா கும்பாபிஷேகம்!

விருதகிரீஸ்வரர் மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, யாகசாலை ஆரம்பிப்பதற்காக, சூரிய ஒளியிலிருந்து அக்கினி வரவழைக்கப்பட்டது. தொடர்ந்து யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

சமத்துவதத்திற்கான ஸ்ரீராமானுஜரின் சிலை இன்று திறப்பு

ஸ்ரீராமானுஜரின் 216 அடி உயர சமத்துவத்திற்கான சிலை ஹைதராபாத் முச்சிந்தல் பகுதியில் உள்ள திரிதண்டி ராமானுஜ சின்ன ஜீயர் சுவாமிகளின் ஆசிரம வளாகத்தில் 45 ஏக்கரில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 2-ம் தேதி முதல் வரும் 14-ம் தேதி வரை இங்கு…

திருப்பதி கோவிலின் நகலை கட்டுதாம் அபுதாபி… அடேங்கப்பா!..

முதல் பாரம்பரிய இந்து கோவில் ஐக்கிய அரபு அமீரகத்தில் கட்ட அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது. கோவில் கட்டும் பணி தற்போது நடந்து வருகிறது. 2023ம் ஆண்டுக்குள் கட்டி முடிக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அபுதாபியில் சுமார் ரூ.888 கோடி செலவில் கோயில்…

சுப்பிரமணிய சுவாமிக்கு அபிஷேக அலங்காரம்!

மயிலாடுதுறை மாவட்டம், வைத்தியநாதசுவாமி கோவிலில், திருக்கார்த்திகையினை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில், மயில் வாகனத்தில் சுப்பிரமணிய சுவாமி வள்ளி தெய்வானையுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்! ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்!

திருப்பரங்குன்றத்தில் தெப்பத்திருவிழா நான்காம் நாள்!

திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி கோவிலில், இன்று தெப்பத் திருவிழா நான்காம் திருநாளை முன்னிட்டு, தெய்வயானையுடன் சுப்பிரமணியசாமி சுவாமி திருவாட்சி மண்டபத்தை வலம் வந்து, பக்தர்களுக்கு காட்சி அளித்தார்! திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்!