• Thu. Apr 25th, 2024

அழகு குறிப்பு

  • Home
  • அழகு குறிப்புகள்:

அழகு குறிப்புகள்:

தோல் வறட்சி மற்றும் சுருக்கத்தைத் தடுக்கதோல் வறண்டும், சுருக்கமும் இருந்தால் ஆலிவ் ஆயிலைத் தடவி, சிறிது நேரம் ஊற வைத்து, சோப்பு போட்டு குளிக்க வேண்டும்.

அழகு குறிப்புகள்:

முகச்சுருக்கம் நீங்க: நல்லெண்ணெய், பாதாம் எண்ணெய் இரண்டையும் சமமாக எடுத்து முகம் மற்றும் உடல் முழுவதும் தடவி, சிறிது ஊறவிட்டு கடலை மாவினால் தேய்த்துக் கழுவுங்கள்.

அழகு குறிப்புகள்:

கை, கால் முட்டிகளில் உள்ள கருப்பு நிறம் மாற: கை, கால் முட்டிகளில் கருப்பு நிறம் அதிகமாக இருந்தால், தொடர்ந்து அந்த இடத்தில் எலுமிச்சப்பழ சாற்றை தேய்த்து சோப்பு போட்டு குளித்தால், நாளடைவில் கறுப்பு நிறம் மறைந்து விடும்.

அழகு குறிப்புகள்:

கால் பாதங்கள் மிருதுவாக: குளிப்பதற்கு முன் கஸ்தூரி மஞ்சளுடன் வெண்ணெய்யைக் கலந்து நன்றாகத் தேய்த்து வந்தால் சொரசொரப்பான பாதமும் மிருதுவாகி விடும்.

அழகு குறிப்புகள்:

தலைமுடி நன்கு வளர:கடுக்காய், செம்பருத்தி பூ, நெல்லிக்காய் ஆகியவைகளை சமஅளவு எடுத்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி கூந்தலில் தடவினால் முடி நன்றாக வளரும்.

அழகு குறிப்பு

கூந்தல் பட்டுப்போன்று இருக்க:கூந்தலுக்கு கெமிக்கல் கலந்த கண்டிஷனர்களைப் பயன்படுத்துவதற்கு பதிலாக தயிரைப் பயன்படுத்தினால், கூந்தல் நன்கு பட்டுப் போன்று, மென்மையாக இருக்கும்.

அழகு குறிப்புகள்:

கோதுமை மாவில் வெண்ணையை கலந்து கழுத்தைச் சுற்றி பூசி வர வேண்டும். பின்னர் 20 நிமிடங்கள் கழித்து குளிக்க வேண்டும். அவ்வாறு தினமும் செய்தால் கழுத்தின் கருவளையம் நீங்கும். சூடான நல்லெண்ணைய்யால் கழுத்துப் பகுதியில் மசாஜ் செய்தால் சுருக்கம், கறுப்பு வளையம்…

அழகு குறிப்புகள்:

சரும அலர்ஜியில் இருந்து நம்மைக் காக்க: சருமத்தில் ஏற்படக்கூடிய அலர்ஜிகளிலிருந்து மஞ்சளில் இருக்கக்கூடிய ஆண்ட்டிசெப்டிக் துகள்கள் நம்மை காத்திடும். வெள்ளரிக்காயை பேஸ்ட்டாக்கிக் கொண்டு, அத்துடன் ஒரு ஸ்பூன் மஞ்சள் தூளை சேர்த்து நன்றாக கலக்கி முகத்தில் ஃபேஸ் மாஸ்க்காக போட்டு, நன்றாக…

அழகு குறிப்புகள்:

சருமம் பொலிவு பெற: உங்கள் சருமத்தை பொலிவோடும், பிரகாசமாகவும் ஜொலிக்க வைக்க வேண்டுமா? அப்படியானால் ஒரு டீஸ்பூன் தக்காளி விழுதுடன், 3-4 துளிகள் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து, கருமையாக இருக்கும். முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, பின்…

அழகு குறிப்புகள்:

கருவளையம் நீங்க:கறுப்பு டீ தயாரித்துக் கொள்ளுங்கள். அது குளிர்ந்ததும் அதில் பஞ்சை நனைத்துப் பிழிந்து கண்களின் மேல் வையுங்கள். புதினா சாற்றை கண்களைச் சுற்றி தடவி வர, கண்களை சுற்றிய கருவளையங்கள் நாளடைவில் மறையும்.