முகத்தில் உள்ள கருமை நீங்க:
சந்தனப் பொடியில், சிறிது மஞ்சள் தூளை சேர்த்து, தண்ணீர் ஊற்றி பேஸ்ட் போல் கலந்து, முகத்திற்கு தடவி 20-25 நிமிடம் ஊற வைத்து கழுவினால் முகம் கருமை நீங்கி பளிச்சென்று இருக்கும்.
மேனியை பொன்னிறமாக்க நலங்குமாவு:
தேவையான பொருட்கள்கடலைப் பருப்பு – 50 கிராம், பாசிப் பருப்பு – 50 கிராம், வசம்பு – 50 கிராம், ரோஜா மொக்கு – 50 கிராம், சீயக்காய் – 50 கிராம், அரப்புத் தூள் – 50 கிராம்வெட்டி வேர்…
முகத்தின் பொலிவிற்க்கான குறிப்புகள்!
மஞ்சள்மஞ்சள் மற்றும் கடலைமாவை பால் அல்லது தண்ணீரில் கலந்து முகத்தில் பூசி, 15 அல்லது 20 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவவும். இது முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை நீக்கி பொலிவைத் தரும். தேங்காய் எண்ணெய்தேங்காய் எண்ணெயையும் சர்க்கரையையும் கலந்து முகம் மற்றும்…
அழகு குறிப்பு
முகம் புதுப்பொலிவுடன் இருக்க தயிர் ஆலிவ் ஆயில் போதும்.அதே போல, இன்னொரு டிப்ஸ், உங்கள் வீட்டில் உள்ள தயிரில் இருக்கிற லாக்டிக் அமிலம் வறண்ட சருமத்தை ஈரமாக்கி சருமத்தில் உள்ள நுண் துளைகளை இறுக்கி இளமையான பிரகாசத்தை அளிக்கிறது. அதை எப்படி…
அழகு குறிப்பு
மஞ்சளில் இருக்கக்கூடிய ஆண்ட்டிசெப்டிக் துகள்கள் சருமத்தில் ஏற்படக்கூடிய அலர்ஜிகளிலிருந்து நம்மை காத்திடும். வெள்ளரியை பேஸ்ட்டாக்கிக் கொள்ளுங்கள் அத்துடன் ஒரு ஸ்பூன் மஞ்சள் தூளை சேர்த்து நன்றாக கலக்கி முகத்தில் ஃபேஸ் மாஸ்க்காக போட வேண்டும். நன்றாக காய்ந்ததும் கழுவி விடலாம். கற்றாழையில்…
முகம்புத்துணர்வுடன் இருக்க:
தினமும் காலையிலும், மாலையிலும் தக்காளியை நறுக்கி கஸ்தூரி மஞ்சளில் அமிழ்த்தி முகத்தில் வைத்து மெதுவாக மசாஜ் செய்து 10 நிமிடங்களுக்குப் பின் குளிர்ந்த நீரில் முகத்தை கழுவினால் முகம் புத்துணர்வோடு காணப்படும்.
கூந்தல் பளபளப்பிற்கு:
உலர்ந்த பூந்தி கொட்டையைக் உடைத்து, அதில் இருக்கும் கொட்டையை நீக்கி விட்டு, அதன் தோலை வெதுவெதுப்பான நீரில் ஊற வைக்க வேண்டும். ஊறவைத்த தண்ணீரில், சீயக்காய் சேர்த்து தலைக்கு குளித்தால், கூந்தல் பளபளப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும். முடி உதிர்தலும் குறையும்.
அழகு குறிப்புகள்:
சம்மரில் முகம் எண்ணெய் வலியாமல் இருக்க: கடலை மாவை தண்ணீரில் குழைத்து, முகம், கழுத்துப் பகுதிகளில் அப்ளை செய்து, 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீர்pல் முகத்தைக் கழுவினால் எண்ணெய் பசை இல்லாமல், கரும்புள்ளிகள் மறைந்து முகம் பளீச்சென்று இருக்கும். இதை…
முடிசெழித்து வளர:
வாரத்திற்கு ஒரு முறை வெண்ணெய்யை தலைக்கு தடவி ஒரு மணிநேரம் கழித்து கழுவி வந்தால் முடி நன்றாக வளரும்.
உடல் சூடு குறைய:
குளிர்ந்த நீர் அல்லது குளிர்ந்த பாலில் சந்தனத்தைப் போட்டு குழைத்து நெற்றி, தாடை, முகத்தில் தடவிவிட்டு உலர்ந்ததும் கழுவினால் உடல்சூடு குறைந்து விடும். மேலும் சந்தனப்பொடியுடன் ரோஸ் வாட்டரை சேர்த்து கலந்து முகத்தில் உபயோகித்தாலும் உடலுக்கு குளிர்ச்சியை ஏற்படுத்திக் கொடுக்கும்.