• Fri. Apr 26th, 2024

கொலை முயற்சி வழக்கு -. அனிதா ராதாகிருஷ்ணன் விடுவிப்பு..!

ByA.Tamilselvan

Jan 31, 2023

கொலை முயற்சி வழக்கில் குற்றம் நிரூபிக்கப்படாததால் அனிதா ராதாகிருஷ்ணனை விடுவித்து தூத்துக்குடி நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது.
தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகநேரி முன்னாள் நகர திமுக செயலாளராக இருந்தவர் சுரேஷ். இவர் கடந்த 2011-ம் ஆண்டு மார்ச் மாதம் கத்தியால் குத்தப்பட்டார். இந்த வழக்கில் சசிக்குமார், மணிகண்டன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதைத்தொடர்ந்து சுரேஷ் உள்ளிட்ட 6 பேர் சேர்ந்து சசிக்குமாரை கொலை செய்தனர்.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சுரேஷ், “அனிதா ராதாகிருஷ்ணன் தூண்டுதலின் பேரில் என்னை சசிக்குமார் கொலை செய்ய முயன்றார். அதனால் சசிக்குமாரை கொலை செய்தோம்” என வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்து இருந்தனர். அதன்பேரில், ஆறுமுகநேரி போலீசார் அனிதா ராதாகிருஷ்ணன் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை தூத்துக்குடி மாவட்ட முதன்மை கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்படாததால் அனிதா ராதாகிருஷ்ணனை விடுவித்து தூத்துக்குடி நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *