திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கீழ்பூமி வனப்பகுதியை ஒட்டியுள்ள நிலத்தில் காட்டு மாடு ஒன்று மர்மமான முறையில் இறந்து கிடப்பதாக வனத்துறையினருக்கு கிடைத்த தகவலை தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வனத்துறையினர் மற்றும் கால்நடை மருத்துவர் ஆகியோர் சென்றனர். இதை தொடர்ந்து கால்நடை மருத்துவர் இறந்து கிடந்த காட்டுமாடை மருத்துவ பரிசோதனை செய்தார். இதை அடுத்து வனத்துறையினர் காட்டுமாடை அங்குள்ள வனப்பகுதிக்குள் புதைத்தனர்.