மதுரையில் வீரன் சுந்தரலிங்க குடும்பனார் 253 வது பிறந்த நாளை முன்னிட்டு தேவேந்திரகுல வேளாளர் மக்கள் சபை சார்பாக ரத்ததான முகாம் நடைபெற்றது
மதுரை அனுப்பானடியில் தேவேந்திரகுல வேளாளர் மக்கள் சபை சார்பாக வீரன் சுந்தரலிங் குடும்பனார் 253 வது பிறந்தநாளையொட்டி தேவேந்திர குல வேளாளர் மக்கள் சபை நிறுவனத் தலைவர் ராமர்பாண்டியன் தலைமையில் வீரன் சுந்தரலிங்க குடும்பனார் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்கள்.
மேலும் இந்த பிறந்தநாள்விழாவில்சுமார் 50 க்கும் மேற்பட்டோர் ரத்ததானம் அளித்தனர் மற்றும் விழாவில் வழக்கறிஞர் எழிலரசுஇளங்கீறன் , ராஜ்குமார் இரணியன், பூமிராஜன், மாமல்லபாண்டியன், , சையத் இப்ராஹிம் ,மற்றும் தேவேந்திர குல வேளாளர் மக்கள் சபை நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்