தேனி மாவட்டம், பெரியகுளம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில், பெரியகுளம் அரசு மருத்துவமனை மற்றும் பசியில்லா பெரியகுளம் இணைந்து நடத்திய மாபெரும் இரத்ததான முகாம் பசியில்லா பெரியகுளம் அஹமது பௌஜூதீன் தலைமையில் நடைபெற்றது. மருத்துவமனை இரத்த வங்கி தலைமை மருத்துவர் பாரதி, பெரியகுளம் மக்கள் நலச் சங்க நிர்வாகி சதீஷ்குமார், பசுமையின் தோழர் பெத்தனசாமி, அஸ்ரார் அஹமது, பல்கர் பீர் ஒலி மற்றும் செவிலியர்கள் கலந்து கொண்டனர். பலரும் இரத்ததானம் வழங்கினார்கள்.