கோவையை பொறுத்தவரையில் வித்தியாசமான தேர்தல் பரப்புரைகள் காணமுடியும். கடந்த சட்டமன்ற தேர்தலின் போது உபி முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் வா,ஸ்மிருதி இரானி ஆகியோர் வானதி ஸ்ரீனிவாசனுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தனர். அது போல வினோதமாக பாஜக வேட்பாளர் ஒருவர் ஹெல்மெட் அணிந்து பிரச்சாரம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் இந்த முறை பாஜக தனித்து போட்டியிடுகிறது. அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறிய பாஜக இந்த முறை எப்படியாவது தனது வாக்கு வங்கியை உயர்த்தும் முடிவில் இருக்கிறது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் இதனால் பாஜகவினர் வீடு வீடாக பிரச்சாரம் செய்து வருகின்றனர். முக்கியமாக கொங்கு மாவட்டங்கள், தென் மாவட்டங்களில் பாஜகவினர் மிக தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் பாஜக சார்பாக கோவை செல்வபுரத்தில் 76வது வார்டில் பாஜக சார்பாக கார்த்திக் என்ற வேட்பாளர் போட்டியிடுகிறார். நேற்று இவர் பாஜக சார்பாக தொண்டர்களுடன் சேர்ந்து வீடு வீடாக பிரச்சாரம் செய்து இருக்கிறார். அப்போது தெரு ஒன்றை கடக்கும் போது இவர் மீது அங்கிருந்த மர்ம நபர்கள் கற்களை வீசி தாக்கியதாக கூறப்படுகிறது. அதோடு சாலை ஓரம் கிடந்த குப்பைகளையும் வீசி சிலர் தாக்கி உள்ளனர்.
பாஜக வேட்பாளர் கார்த்திக் மீண்டும் இப்படி திடீரென தாக்குதல் நடத்தியது யார் என்று தெரியவில்லை. என்னுடைய உயிருக்கு ஆபத்து உள்ளது. என்னுடைய பிரச்சாரத்தை தடுக்க வேண்டும். என்னை பிரச்சாரம் செய்ய விடமால் முடக்க வேண்டும் என்று சிலர் முயற்சிக்கிறார்கள். அதனால் இப்படி கற்களை வீசி தாக்குதல் நடத்துகின்றனர் என்று கார்த்திக் குறிப்பிட்டு இருக்கிறார்.
இந்த நிலையில் இன்று கார்த்திக் செல்வபுரத்தில் பிரச்சாரம் செய்ய ஹெல்மெட்டோடு வந்தார். தலையில் கற்களை வைத்து தாக்க கூடாது என்பதால் கார்த்திக் ஹெல்மெட் அணிந்தபடி பிரச்சாரம் செய்ய வந்தார். கார்த்திக்கோடு சேர்த்து மற்ற பாஜக நிர்வாகிகளும் ஹெல்மெட் அணிந்து வந்து பிரச்சாரம் செய்தனர். 10க்கும் மேற்பட்ட பாஜகவினர் கார்த்திக்கொண்டு ஹெல்மெட் அணிந்தபடி வந்து மக்களிடம் வாக்கு கேட்டனர்.
கையில் தாமரை பூ, தலையில் ஹெல்மெட் அணிந்து பாஜகவினர் வாக்கு கேட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பான வீடியோவும் இணையம் முழுக்க வைரலாகி வருகிறது.
- இனி ரேஷன் கடைகளிலும் ‘மீண்டும் மஞ்சள் பை’…தமிழக முதல்வர் ஸ்டாலின் கடந்த சில நாட்களுக்கு முன் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்கக்கூடிய வகையில் ‘மீண்டும் […]
- ஒராண்டில் திமுக எந்த சாதனையும் செய்யவில்லை- பிரேமலதா விஜயகாந்த் பேட்டிகோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வருகை தந்த பிரேமலாத விஜயகாந்த் திமுக அரசு கடந்த ஒராண்டில் […]
- சார்ஜிங் பூத்… ஆப் மூலம் பணம் செலுத்தி சார்ஜிங் செய்துக்கொள்ளலாம்…கேரளா மாநிலம், கோட்டயம் அடுத்த உழவூர் ஊராட்சியில் மின்சார வாகனங்களை சார்ஜ் செய்ய மின்கம்பத்தில் சார்ஜிங் […]
- மரம் அறுக்கும் ரம்பத்தால் மனைவி,பிள்ளைகளை கொலை செய்த ஐடி ஊஉழியர் தற்கொலைசென்னையில் பயங்கரம் மரம் அறுக்கும் ரம்பம் வாங்கி மனைவி, பிள்ளைகளின் கழுத்தை அறுத்து கொலை செய்த […]
- ஏழுமலையானை தரிசிக்க 15 மணிநேரம் காத்திருக்கும் பக்தர்கள்..திருப்பதியில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் தரிசனத்துக்காக 15 மணி நேரம் காத்திருப்புஉலகப்புகழ் பெற்ற எழுமலையான் கோயிலில் […]
- கழுகுமலையில் ரேசன் அரிசி பதுக்கல் -4 பேர் கைதுகழுகுமலையில் ரேசன் அரிசி பதுக்கி விற்பனை செய்த மில் உரிமையாளர் உள்பட 4 பேர் கைது. […]
- தமிழக காங்கிரசுக்கு அடுத்த தலைவர் விஜயதாரணியா -ஜோதிமணியா?தமிழக காங்கிரசில் மாநில தலைவர் பதிவிக்கு அடுத்து பெண் ஒருவருக்கு வாய்ப்பு கொடுக்கபடலாம் என்று பேசப்படுகிறது. […]
- முதல்வரின் குரல் பாஜகவுக்கு பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது..மதுரையில் நடைபெற்ற பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியின் போது திராவிடர் விடுதலைக் கழகம் […]
- சிரித்த முகத்துடன் பிறந்த அதிசய குழந்தை…. வைரலாகும் புகைப்படங்கள்…ஆஸ்திரேலியாவில் ஒரு குழந்தை எப்போதும் சிரித்துக்கொண்டிருப்பது போன்ற முக அமைப்புடன் பிறந்திருக்கிறது.உலக நாடுகளில் ஒவ்வொரு நாளும் […]
- சாண்ட்விச் தான் உணவே… 23 ஆண்டுகளாக சாண்ட்விச் சாப்பிட்ட இளம்பெண்..இங்கிலாந்தில் கடந்த 23 ஆண்டுகளாக இளம்பெண் ஒருவர் சாண்ட்விச் மட்டுமே சாப்பிட்டு உயிர்வாழ்ந்து வரும் சம்பவம் […]
- இதை செய்யாவிட்டால் ரேஷனில் பொருள் வாங்க முடியாது.ஜூன் 30-ம் தேதிக்குள் ரேஷன் கார்டுடன் ஆதார் கார்டை இணைக்காவிட்டால் ரேஷன் பயன்களைப் பெற முடியாது […]
- திமுக ஆலோசனைக் கூட்டம்… முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்…சென்னை அறிவாலயத்தில் இன்று முதல்வர் ஸ்டாலின் தலைமையில் திமுகவின் மாவட்ட செயலாளர் கூட்டம் நடைபெற்றது. இந்த […]
- 79,000 மாணவ,மாணவிகளுக்கு பணி நியமன ஆணைகள்முதலமைச்சர்உத்தரவின் கீழ் தமிழகம் முழுவதும் அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் நடைபெற்று வரும் தனியார் துறையின் […]
- சொதி:தேவையானவை: பாசிப்பருப்பு – 200 கிராம், உருளைக்கிழங்கு, சின்ன வெங்காயம் – தலா 200 கிராம், […]
- புத்துணர்வு தரும் ஏற்காடு கோடை விழா…கடந்த இரண்டு ஆண்டுகளாக நடத்தப்படாமல் இருந்த ஏற்காடு கோடைவிழா மே 25 தொடங்கி ஜூன் 1 […]