கோவையை பொறுத்தவரையில் வித்தியாசமான தேர்தல் பரப்புரைகள் காணமுடியும். கடந்த சட்டமன்ற தேர்தலின் போது உபி முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் வா,ஸ்மிருதி இரானி ஆகியோர் வானதி ஸ்ரீனிவாசனுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தனர். அது போல வினோதமாக பாஜக வேட்பாளர் ஒருவர் ஹெல்மெட் அணிந்து பிரச்சாரம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் இந்த முறை பாஜக தனித்து போட்டியிடுகிறது. அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறிய பாஜக இந்த முறை எப்படியாவது தனது வாக்கு வங்கியை உயர்த்தும் முடிவில் இருக்கிறது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் இதனால் பாஜகவினர் வீடு வீடாக பிரச்சாரம் செய்து வருகின்றனர். முக்கியமாக கொங்கு மாவட்டங்கள், தென் மாவட்டங்களில் பாஜகவினர் மிக தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் பாஜக சார்பாக கோவை செல்வபுரத்தில் 76வது வார்டில் பாஜக சார்பாக கார்த்திக் என்ற வேட்பாளர் போட்டியிடுகிறார். நேற்று இவர் பாஜக சார்பாக தொண்டர்களுடன் சேர்ந்து வீடு வீடாக பிரச்சாரம் செய்து இருக்கிறார். அப்போது தெரு ஒன்றை கடக்கும் போது இவர் மீது அங்கிருந்த மர்ம நபர்கள் கற்களை வீசி தாக்கியதாக கூறப்படுகிறது. அதோடு சாலை ஓரம் கிடந்த குப்பைகளையும் வீசி சிலர் தாக்கி உள்ளனர்.
பாஜக வேட்பாளர் கார்த்திக் மீண்டும் இப்படி திடீரென தாக்குதல் நடத்தியது யார் என்று தெரியவில்லை. என்னுடைய உயிருக்கு ஆபத்து உள்ளது. என்னுடைய பிரச்சாரத்தை தடுக்க வேண்டும். என்னை பிரச்சாரம் செய்ய விடமால் முடக்க வேண்டும் என்று சிலர் முயற்சிக்கிறார்கள். அதனால் இப்படி கற்களை வீசி தாக்குதல் நடத்துகின்றனர் என்று கார்த்திக் குறிப்பிட்டு இருக்கிறார்.
இந்த நிலையில் இன்று கார்த்திக் செல்வபுரத்தில் பிரச்சாரம் செய்ய ஹெல்மெட்டோடு வந்தார். தலையில் கற்களை வைத்து தாக்க கூடாது என்பதால் கார்த்திக் ஹெல்மெட் அணிந்தபடி பிரச்சாரம் செய்ய வந்தார். கார்த்திக்கோடு சேர்த்து மற்ற பாஜக நிர்வாகிகளும் ஹெல்மெட் அணிந்து வந்து பிரச்சாரம் செய்தனர். 10க்கும் மேற்பட்ட பாஜகவினர் கார்த்திக்கொண்டு ஹெல்மெட் அணிந்தபடி வந்து மக்களிடம் வாக்கு கேட்டனர்.
கையில் தாமரை பூ, தலையில் ஹெல்மெட் அணிந்து பாஜகவினர் வாக்கு கேட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பான வீடியோவும் இணையம் முழுக்க வைரலாகி வருகிறது.
- திருப்பரங்குன்றத்தில் ஒரிசா ரயில் விபத்தில் பலியானவர்களுக்கு மோட்ச தீபம்திருப்பரங்குன்றம் அருகே வராஹி அம்மன் கோவிலில் ஒரிசாவில் ரயில் விபத்தில் பலியானவர்களுக்குமோட்ச தீபம் ஏற்றப்பட்டதுமதுரை மாவட்டம் […]
- இந்தியாவில் 10 கோடிக்கும் மேற்பட்டவர்களுக்கு சர்க்கரை நோய்10 கோடிக்கும் மேற்பட்டவர்கள் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐசிஎம்ஆர் நடத்திய ஆய்வில் அதிர்ச்சி தகவல்;2019ம் ஆண்டில் […]
- திருப்பரங்குன்றம் உண்டியல் வருமானம் ரூ52 லட்சம் உட்பட தங்கம், வெள்ளி பொருட்கள் கிடைத்தனதிருப்பரங்குன்றம் கோயில் உண்டியல் வருமானம் ரூ.52 லட்சம் தங்கம் 253 கிராம். வெள்ளி 2 கிலோ […]
- அடியாட்கள் மூலம் நிலத்தை கையகப்படுத்த முயல்வதாக நில அளவையருடன் வாக்குவாதம்நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் அதிகாரத்தை பயன்படுத்தி நிலத்தை அடியாட்கள் மூலம் கையகப்படுத்த முயல்வதாக […]
- மின் கட்டண உயர்வு இல்லை – மின்சார வாரியம் விளக்கம்மின்சாரவாரியம் வெளியிட்டுள்ள தகவலின் படி வீட்டு இணைப்புகளுக்கு எவ்வித கட்டணம் உயர்வும் இல்லை , இலவச […]
- ஊட்டி மலை ரயில் விபத்து… பயணிகளுக்கு பாதிப்பில்லைஊட்டி மலை ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.விபத்தில் பயணிகளுக்கு பாதிப்பில்லை என தகவல் வெளியாகியுள்ளதுஒடிசா மாநிலம் […]
- தென்மேற்கு பருவமழை தொடங்கியது – வானிலை ஆய்வு மையம்தென்மேற்கு பருவமழை கேரளா பகுதிகளில் இன்று தொடங்கி உள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள […]
- திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் உண்டியல் எண்ணும் பணிதிருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோவிலில் சித்திரை மாதம் உண்டியல் எண்ணும் பணி நடைபெற்றது. மதுரை மாவட்டம் […]
- ஆளுநர் அவராக பேசுகிறாரா..யாரும் அறிக்கை அனுப்பி பேச சொல்கின்றனரா – செல்லூர் ராஜூ பேட்டிஆளுநர் ஆர்.என்.ரவியின் அரசியல் கருத்துகளை ஏற்க முடியாது என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.ஆளுநர் […]
- ‘லிவ் இன்’ காதலுடன் வசித்துவந்த பெண் உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்டு கொலைலிவ் இன் காதலுடன் வசித்துவந்த பெண் படுகொலை செய்யப்பட்டுள்ளார். அவரது உடல் துண்டு துண்டாக வெட்டப்படுள்ளது.மராட்டிய […]
- உமா மகேஸ்வரி சமேத மணிகண்டேஸ்வரர் கோவிலில் பாலாலயம்கீழமாத்தூர் உமா மகேஸ்வரி சமேத மணிகண்டேஸ்வரர் கோவிலில் பாலாலயம் நடைபெற்றது.மதுரை மாவட்டம் கீழமாத்தூர் கிராமத்தில் அமைந்துள்ள […]
- இலக்கியம்நற்றிணைப் பாடல் 182: நிலவும் மறைந்தன்று இருளும் பட்டன்றுஓவத்து அன்ன இடனுடை வரைப்பின்பாவை அன்ன நிற் […]
- படித்ததில் பிடித்ததுசிந்தனைத்துளிகள் ஒரு டீச்சர் தன் வகுப்பு மாணவர்களிடம் வெற்றுத் தாள்களைக் கொடுத்து, ஒவ்வொருவரையும், வகுப்பில் உள்ள […]
- பொது அறிவு வினா விடைகள்
- இன்று மனிதர்களுக்கு தூய காற்று, ஊட்ட மிகு உணவு வழங்கும் உலகப் பெருங்கடல்கள் நாள்நாம் சுவாசிக்கும் தூய காற்றையும், ஊட்ட மிகு உணவையும் வழங்கும் கடல்கள் – உலகப் பெருங்கடல்கள் […]