நகர்புற உள்ளாட்சி தேர்தலில் திராவிட கட்சிகளுடன் போராடுவதை விட விஜய் மக்கள் இயக்கத்தினருடன் போராடுவது நாம் தமிழர் தமிழர் கட்சியினருக்கு வேலையாக வந்து விட்டது. இந்த நிலையில் விஜய்யை வம்புக்கு இழுத்துள்ள சீமான் கோட்பாட்டு அளவில் அவரும் நானும் வேறு வேறு என தெரிவித்துள்ளார். மேலும் விஜய்க்கு சில கேள்விகளையும் எழுப்பியுள்ளார்.
விஜயின் மக்கள் இயக்கம் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுகிறது. இதற்கு முன் நடந்த தேர்தலில் சுமார் 115 இடங்களை விஜய் மக்கள் இயக்கம் வென்றது. முழுநேர அரசியல் செய்யும் சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு கூட இத்தனை இடங்கள் கிடைக்கவில்லை. விமர்சகர்களும் விஜய் மக்கள் இயக்கத்துக்கு கிடைத்த வெற்றியை வைத்தே நாம் தமிழர் கட்சியையும், சீமானையும் விமர்சித்தனர்.
உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம் தேர்தலில் போட்டியிடுவது குறித்து சீமானிடம் பத்திரிகையாளர்கள் கேட்டனர். அப்போது பேசிய அவர், விஜய் என்னுடைய தம்பி தான். ஆனால் கோட்பாட்டுரீதியில் நாங்கள் இருவரும் வேறு வேறு. என்னுடைய தலைவர் பிரபாகரன். அவரை பற்றி விஜய் இதுவரை ஏதாவது பேசியிருக்கிறாரா? ஆற்று மணல் எடுப்பதையோ, குளிர்பான நிறுவனங்கள் நீரை உறிஞ்சுவதையோ கண்டித்து இருக்கிறாரா? அவருடைய கோட்பாடு என்னவென்று தெரியாமல் அவர் எனக்கு போட்டி என்று எப்படி கேட்கிறீர்கள் என சீமான் காட்டமாக கேள்வி எழுப்பினார்.
எம்ஜிஆர் அரசியலில் ஜெயித்தது போல் இனி எந்த நடிகரும் வெல்ல முடியாது என சிரஞ்சீவி, பவன் கல்யாண் ஆகியோரை உதாரணமாக சுட்டிக் காட்டினார். கமல்ஹாசன் 5 வயதிலிருந்து நடித்துக் கொண்டிருக்கிறார். அவரையே மக்கள் அங்கீகரிக்கவில்லை. ரஜினிகாந்தும் அரசியலில் இருந்து விலகி விட்டர். தம்பி விஜய் அரசியலுக்கு வந்தாலும் அவர் என்ன கொள்கை கோட்பாட்டை முன்வைக்கிறார் என்பதை பார்க்க வேண்டும் என சீமான் தெரிவித்தார்.
விஜய் தனது மக்கள் இயக்கத்தின் சார்பில் நிற்கும் வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வதில்லை அவர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்று ஒரு துண்டு அறிக்கை கூட விடவில்லை. அப்படியிருந்தும் அவர்கள் பல இடங்களில் வெற்றி பெறுகிறார்கள். ஆனால் முழுநேர அரசியல் கட்சியான நாம் தமிழரால் விஜய் மக்கள் இயக்கம் பெறும் வெற்றியைக்கூட பெற முடியவில்லை. சொந்த தொகுதியில் கூட செல்வாக்கு இல்லாத கட்சியாக நாம் தமிழர் கட்சி இருப்பதாகவும் இந்த இரண்டையும் ஒப்பிட்டு விமர்சகர்கள் கேள்விகள் வைப்பதால் சீமான் கோப்படுவதாக கூறப்படுகிறது.
- இனி ரேஷன் கடைகளிலும் ‘மீண்டும் மஞ்சள் பை’…தமிழக முதல்வர் ஸ்டாலின் கடந்த சில நாட்களுக்கு முன் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்கக்கூடிய வகையில் ‘மீண்டும் […]
- ஒராண்டில் திமுக எந்த சாதனையும் செய்யவில்லை- பிரேமலதா விஜயகாந்த் பேட்டிகோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வருகை தந்த பிரேமலாத விஜயகாந்த் திமுக அரசு கடந்த ஒராண்டில் […]
- சார்ஜிங் பூத்… ஆப் மூலம் பணம் செலுத்தி சார்ஜிங் செய்துக்கொள்ளலாம்…கேரளா மாநிலம், கோட்டயம் அடுத்த உழவூர் ஊராட்சியில் மின்சார வாகனங்களை சார்ஜ் செய்ய மின்கம்பத்தில் சார்ஜிங் […]
- மரம் அறுக்கும் ரம்பத்தால் மனைவி,பிள்ளைகளை கொலை செய்த ஐடி ஊஉழியர் தற்கொலைசென்னையில் பயங்கரம் மரம் அறுக்கும் ரம்பம் வாங்கி மனைவி, பிள்ளைகளின் கழுத்தை அறுத்து கொலை செய்த […]
- ஏழுமலையானை தரிசிக்க 15 மணிநேரம் காத்திருக்கும் பக்தர்கள்..திருப்பதியில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் தரிசனத்துக்காக 15 மணி நேரம் காத்திருப்புஉலகப்புகழ் பெற்ற எழுமலையான் கோயிலில் […]
- கழுகுமலையில் ரேசன் அரிசி பதுக்கல் -4 பேர் கைதுகழுகுமலையில் ரேசன் அரிசி பதுக்கி விற்பனை செய்த மில் உரிமையாளர் உள்பட 4 பேர் கைது. […]
- தமிழக காங்கிரசுக்கு அடுத்த தலைவர் விஜயதாரணியா -ஜோதிமணியா?தமிழக காங்கிரசில் மாநில தலைவர் பதிவிக்கு அடுத்து பெண் ஒருவருக்கு வாய்ப்பு கொடுக்கபடலாம் என்று பேசப்படுகிறது. […]
- முதல்வரின் குரல் பாஜகவுக்கு பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது..மதுரையில் நடைபெற்ற பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியின் போது திராவிடர் விடுதலைக் கழகம் […]
- சிரித்த முகத்துடன் பிறந்த அதிசய குழந்தை…. வைரலாகும் புகைப்படங்கள்…ஆஸ்திரேலியாவில் ஒரு குழந்தை எப்போதும் சிரித்துக்கொண்டிருப்பது போன்ற முக அமைப்புடன் பிறந்திருக்கிறது.உலக நாடுகளில் ஒவ்வொரு நாளும் […]
- சாண்ட்விச் தான் உணவே… 23 ஆண்டுகளாக சாண்ட்விச் சாப்பிட்ட இளம்பெண்..இங்கிலாந்தில் கடந்த 23 ஆண்டுகளாக இளம்பெண் ஒருவர் சாண்ட்விச் மட்டுமே சாப்பிட்டு உயிர்வாழ்ந்து வரும் சம்பவம் […]
- இதை செய்யாவிட்டால் ரேஷனில் பொருள் வாங்க முடியாது.ஜூன் 30-ம் தேதிக்குள் ரேஷன் கார்டுடன் ஆதார் கார்டை இணைக்காவிட்டால் ரேஷன் பயன்களைப் பெற முடியாது […]
- திமுக ஆலோசனைக் கூட்டம்… முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்…சென்னை அறிவாலயத்தில் இன்று முதல்வர் ஸ்டாலின் தலைமையில் திமுகவின் மாவட்ட செயலாளர் கூட்டம் நடைபெற்றது. இந்த […]
- 79,000 மாணவ,மாணவிகளுக்கு பணி நியமன ஆணைகள்முதலமைச்சர்உத்தரவின் கீழ் தமிழகம் முழுவதும் அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் நடைபெற்று வரும் தனியார் துறையின் […]
- சொதி:தேவையானவை: பாசிப்பருப்பு – 200 கிராம், உருளைக்கிழங்கு, சின்ன வெங்காயம் – தலா 200 கிராம், […]
- புத்துணர்வு தரும் ஏற்காடு கோடை விழா…கடந்த இரண்டு ஆண்டுகளாக நடத்தப்படாமல் இருந்த ஏற்காடு கோடைவிழா மே 25 தொடங்கி ஜூன் 1 […]