மேற்கு வங்கத்தில் பாஜகவின் வாட்ஸ்அப் குழுவிலிருந்து மத்திய இணை அமைச்சர் உள்ளிட்ட கட்சியின் முக்கியத் தலைவர்கள் வெளியேறியுள்ளதாகவும், இவர்களில் 30 பேர் அடுத்தகட்ட ஆலோசனைக்காக ரகசியக் கூட்டம் நடத்தவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் தோல்விக்குப் பின் பாஜகவின் வாட்ஸ் அப் குழுவிலிருந்து அதன் தலைவர்கள் பலரும் வெளியேறி வருகின்றனர். இவர்களில் எம்எல்ஏக்கள் உள்ளிட்ட 30 பேர் அடுத்தகட்ட நடவடிக்கைக்காக ரகசியமாகக் கூடி ஆலோசிக்கவுள்ளனர்.
கடந்த ஆண்டு மேற்கு வங்க மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் வெல்ல பாஜக தீவிரம் காட்டியிருந்தது. ஆனால், அங்கு திரிணமூல் காங்கிரஸ் சார்பில் ஆளும் முதல்வர் மம்தா பானர்ஜியிடம் படுதோல்வி அடைந்தது. இதில் மூன்றாவது முறையாக மம்தா முதல்வராகத் தொடர, பாஜகவிற்கு 77 எம்எல்ஏக்கள் கிடைத்தனர். இவர்களில் 10 எம்எல்ஏக்கள் உள்ளிட்டோர் அம்மாநில பாஜகவின் வாட்ஸ் அப் குழுமத்திலிருந்து வெளியேறத் துவங்கினர்.

மேற்கு வங்க அரசியலில் அக்கறையற்ற பாஜக தலைமை:
இதற்கு தேர்தலில் தோல்விக்கு பின் பாஜக தலைமை, மேற்கு வங்க மாநில அரசியலில் அக்கறை செலுத்துவதில்லை எனப் புகார் எழுந்தது. தேர்தலுக்கு பின் புதிதாக அமர்த்தப்பட்ட அம்மாநில நிர்வாகிகள் மீதும் அதிருப்தியும் கிளம்பி இருந்தது. இதனால், சில நாட்களுக்கு முன், மத்திய சாலை மற்றும் கப்பல் போக்குவரத்து துறையின் இணை அமைச்சரான சாந்தனு தாக்கூரும் வாட்ஸ் அப் குழுமத்திலிருந்து வெளியேறியிருந்தார்.
இதற்கு முன்பும் அமைச்சர் சாந்தனு, குடியுரிமைப் பாதுகாப்பு சட்டம், (சிஏஏ) உடனடியாக நிறைவேற்றவில்லை என மத்திய அரசின் மீது தேர்தல் சமயத்தில் புகார் கூறியவர். இந்த நிலையில், மேற்கு வங்க மாநில பாஜக நிர்வாகிகளின் வாட்ஸ் அப் குழுவிலிருந்து தலைவர்கள் வெளியேறுவது அதிகரித்தது. இந்த செயல் அவர்களது அதிருப்தியை தன் தலைமைக்கு காட்டியது. இவர்களில் சுமார் 30 பேர் கொல்கத்தாவில் ரகசியமாகக் கூடி ஆலோசனை செய்ய உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாஜக மறுப்பு:
இது குறித்து ‘இந்து தமிழ் திசை’ இணையத்திடம் மேற்கு வங்க பாஜக நிர்வாகிகள் வட்டாரம் கூறும்போது, ”பாஜகவை விட்டு விலகி வேறு கட்சியில் சேர்வதற்கான ஆலோசனைக் கூட்டம் அல்ல இது. எங்கள் மாநிலத்தில் பாஜகவைக் காத்து, மேலும் எப்படி வளர்ப்பது என ஆலோசிக்க உள்ளோம். எங்கள் கட்சியில் சில தலைவர்கள் இங்கு உளவாளியாக செயல்பட்டு பாஜகவை, ஆளும் திரிணமூல் காங்கிரஸிடம் விற்க முயல்கின்றனர். இவர்களை அடையாளம் கண்டு தலைமையிடம் புகார் செய்வோம்” எனத் தெரிவித்தனர்.
மத்துவாஸ் சமூகத்தினரின் அதிருப்தி: மேற்கு வங்க மாநிலத்தின் முக்கிய சமூகத்தினரான மத்துவாஸ்களுக்கு பாஜகவின் புதிய நிர்வாகத்தில் இடமளிக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், மத்துவாஸ் சமூகத்தினர் இணைந்து அம்மாநிலத்தில் புதிதாக பிரச்சினை செய்வதாகக் கருதப்படுகிறது. இதே காரணத்திற்காக பிரச்சினை செய்பவர்களில் ஒருவராக மத்திய இணை அமைச்சரான சாந்தனு தாக்கூரும் இருப்பதாகத் தெரிகிறது. இவரும் மத்துவாஸ் சமூகத்தை சேர்ந்தவர் எனக் கூறப்படுகிறது.
- மதுரை மாநகராட்சி மண்டலம் 4 அலுவலகத்தில் குறைதீர்ப்பு முகாம்மதுரை மாநகராட்சி மண்டலம் 4 அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாம் மேயர் தலைமையில் நடைபெற்றதுமதுரை மாநகராட்சி […]
- அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனம் சார்பில் ஆர்ப்பாட்டம்13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனம் சார்பில் மண்டல அலுவலகம் முன்பாக […]
- நுழைவு தேர்வு இல்லாமல் சென்னை ஐஐடியில் சேரலாம்எந்தவொரு நுழைவுத் தேர்வும் இல்லாமல் சென்னை ஐஐடியில் சேர அற்புதமான ஒரு வாய்ப்பு இருக்கிறது.இந்தியளவில் டாப் […]
- ஆளுநர் ஆர்.என்.ரவியின் பேச்சுக்கு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம்!அத்துமீறி பேசுவதையே வாடிக்கையாக வைத்துள்ளார் ஆளுநர்”நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம்!கல்வியில் சிறந்து விளங்கும் தமிழ்நாட்டை அறிந்தும் […]
- திருமங்கலம் காவல் துணைக் கண்காணிப்பாளர் அலுவலகம் முற்றுகைமதுரை மாவட்டம் திருமங்கலம் காவல் துணைக் கண்காணிப்பாளர் அலுவலகத்தை 200க்கும் மேற்பட்ட கிராம மக்கள் முற்றுகை- […]
- பாரதி கணேஷ் 24 வருடங்கள் கழித்து இயக்கும் குழந்தைகள் படம்விஜயகாந்த், சிம்ரன், கரண் நடித்த ‘கண்ணுபட போகுதய்யா’ படத்தை இயக்கியவர் பாரதி கணேஷ். 1999ம் ஆண்டு […]
- ஆஞ்சநேயருக்கு டிக்கட் முன்பதிவு செய்த ஆதிபுருஷ் படக்குழுராமாயண கதையின் ஒரு பகுதியை மையமாக வைத்து ஓம் ராவத் இயக்கியுள்ள திரைப்படம் ‘ஆதிபுருஷ்’ . […]
- விருதுநகர் அருகே சாலை விபத்து … நிதி நிறுவன ஊழியர்கள் 2 பேர் பலிவிருதுநகருக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுவிட்டு திரும்பி வந்து கொண்டிருந்த நிதிநிறுவன ஊழியர்கள் விபத்தில் சிக்கி பலியானார்கள்.விருதுநகர் […]
- ராஜபாளையத்தில் போக்குவரத்து காவல் நிலைய புதிய கட்டிடம் திறப்புராஜபாளையத்தில் போக்குவரத்து காவல் நிலைய புதிய கட்டிடத்தை காணொளி காட்சி மூலமாக காவல்துறை தலைமை இயக்குனர் […]
- இந்தியாவின் முதல் தபால்காரர் பற்றிய படம் ஹர்காராகலர்புல் பீட்டா மூவ்மென்ட் என்ற நிறுவனத்தின் தயாரிப்பில், உருவாகும் படம் ‘ஹர்காரா’. ‘வி1 மர்டர் கேஸ்’ […]
- விஐய் 68 படத்தின் பெயர் என்ன?விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை தொடர்ந்து வெங்கட் […]
- தமிழகத்தில் தொடர்ந்து உயரும் அரிசி விலை : அதிர்ச்சியில் மக்கள்..!தமிழகத்தில் இந்த மாதத் தொடக்கத்தில் இருந்து அரிசி விலை உயர்ந்து வருவதால் மக்கள் அதிர்ச்சியில் உறைந்து […]
- சென்னை – இலங்கை இடையே பயணிகள் சொகுசு கப்பல் அறிமுகம்..!சென்னை – இலங்கை இடையே பயணிகள் சொகுசு கப்பல் நேற்று அறிமுகமாகி உள்ளது.மத்திய அரசின் சாகர்மாலா […]
- திருமண நிச்சயதார்த்த விழாவில் பாயசத்துக்கு மல்லுக்கட்டு..!திருமண நிச்சயதார்த்த விழாவில் பாயசத்துக்கு மல்லுக்கட்டி ஒருவருக்கொருவர் ரகளையில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இது தொடர்பாகச் […]
- பொறியியல் படிப்பிற்கான ரேண்டம் எண் வெளியீடு..!தமிழகத்தில் பொறியியல் படிப்பிற்கான ரேண்டம் எண் வெளியிடப்பட்டுள்ளது.தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 460-க்கும் மேற்பட்ட என்ஜினீயரிங் […]