ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், உத்தரப் பிரதேசத்தில் பாஜக முன்னிலை வகிக்கிறது. பஞ்சாப்பில் ஆளும் காங்கிரஸுக்கு கடும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
முன்னிலை நிலவரம்
உ.பி: ஆரம்பநிலை முன்னிலை நிலவரங்கள் வெளியாகி வருகின்றன. அனைத்துக் கருத்துக் கணிப்புகளும் சுட்டிக்காட்டியபடியே உ.பி.யில் பாஜக முன்னிலை வகித்து வருகிறது. அடுத்த இடத்தில் சமாஜ்வாதி இருக்கிறது. 403 தொகுதிகளில் பாஜக 190, சமாஜ்வாதி 73 என ஆரம்பநிலை முன்னிலை நிலவரம் இருக்கின்றது. இதுவரை காங்கிரஸ் வெறும் 3 இடங்களில் முன்னிலை வகிக்க, பகுஜன் சமாஜ் கட்சி 5 என்றளவில் உள்ளது.
பஞ்சாப்: பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மிக்கு க்ளீன் ஸ்வீப் என்று கூறியபடியே நிலைமை அக்கட்சிக்கு சாதகமாக சென்று கொண்டிருக்கிறது. இப்போதைக்கு ஆம் ஆத்மி 55, காங்கிரஸ் 16 என்றளவில் முன்னிலை நிலவரம் இருக்கின்றது. பாஜக வெறும் 4 இடங்களில் மட்டுமே முன்னிலை வகிக்கிறது.
கோவா: கோவாவில் தபால் வாக்கு எண்ணிக்கையில் காங்கிரஸ் முன்னிலை வகித்தது. ஆனால் அடுத்தடுத்த சுற்றுகள் பாஜகவுக்கு சாதகமாக சென்று கொண்டிருக்கின்றன. தொங்கு சட்டசபை என்று கருத்துக்கணிப்புகள் கைகாட்டியுள்ள நிலையில், பாஜக முன்னிலை வகிக்கிறது. அண்மை நிலவரப்படி கோவாவில் பாஜக 13, காங்கிரஸ் 5 இடங்களில் முன்னிலை வகிக்கின்றன. 40 சட்டப்பேரவை தொகுதிகள் கொண்ட கோவாவில் 21 தொகுதிகளைக் கைப்பற்றும் கட்சி பெரும்பான்மை பெற்றுவிடும்.
உத்தராகண்ட்: உத்தராகண்டில் பாஜக ஆட்சியைத் தக்க வைக்க கடும் பிரயத்தனங்களை மேற்கொண்ட நிலையில் ஆரம்பநிலை வாக்கு நிலவரம் காங்கிரஸுக்கு சற்றே சாதகமாக சென்றிருந்தாலும்கூட தற்போது அங்கு பாஜக நிலவரம் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. அண்மை நிலவரப்படி பாஜக 35, காங்கிரஸ்: 20, ஆம் ஆத்மி 1 என்ற நிலையில் உள்ளது.
மணிப்பூர்: 60 சட்டப்பேரவைகளைக் கொண்ட மணிப்பூரில் கடந்த 2017-ம் ஆண்டு நடைபெற்ற மணிப்பூர் சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மையை பெற்று பாஜக ஆட்சி அமைந்தது. இம்முறையும் பாஜகவே ஆட்சியமைக்கும் என பெரும்பான்மையான முடிவுகள் வெளிப்படுத்தியுள்ளன. ஆரம்பநிலை வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி பாஜக 11, காங்கிரஸ் 7 இடங்களில் முன்னிலை வகிக்கின்றன.
இந்த 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை காலை 8.00 மணிக்கு தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், உத்தரப் பிரதேசத்தில் எதிர்பார்த்தது போல் பாஜக முன்னிலை வகித்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் உத்தராகண்ட், கோவா, மணிப்பூர் மாநிலங்களில் பலப்பரீட்சயைக் காட்டி வருகிறது.
- அதிமுக வெளி நடப்பு என்பது ஒரு சடங்கு -கே.எஸ்.அழகிரிநிதிநிலை அறிக்கையின்போது அதிமுக வெளி நடப்பு குறித்த கேள்விக்கு.அதிமுக வெளி நடப்பு என்பது ஒரு சடங்கு […]
- மதுரை செல்லம்பட்டி அருகே சாலையில் பாலை கொட்டி போராட்டம்மதுரை செல்லம்பட்டி அருகே.பால் கொள்முதல் விலையை உயர்த்தி தரக் கோரி பால் உற்பத்தியாளர்கள் சாலையில் பாலை […]
- ௭ண்ணும் ௭ழுத்தும் கற்றலை போற்றுவோம் விழாமதுரை மாவட்டம் தங்களாச்சேரி கிராமத்தில் உள்ள நடுநிலைப்ள்ளியில் ௭ண்ணும் ௭ழுத்தும் கற்றலை போற்றுவோம் விழா நடைபெற்றது. […]
- ரூ.1000 உரிமைத்தொகையை பெறுவதற்கான தகுதி என்ன? எடப்பாடி பழனிசாமிஇன்று தாக்கல் செய்யப்பட்ட பொதுபட்ஜெடில் அறிவிக்கப்பட்டரூ.1000 உரிமைத்தொகையை பெறுவதற்கான தகுதி என்னவென்று தெரிவிக்கவில்லை என எடப்பாடி […]
- சோழவந்தானில் பங்குனி மாத பிரதோஷ விழா திரளான பக்தர்கள் பங்கேற்புசோழவந்தான் வைகை கரையில் அமைந்துள்ள பிரளய நாதர் சுவாமி சிவன் கோவிலில் பங்குனி மாத பிரதோஷ […]
- விஜய் சேதுபதி நற்பணி இயக்கம் நடத்திய கிரிக்கெட் போட்டிஇன்றைய இளைஞர்களை சீரழிக்கும் செல்போன், மது போதை இவைகளில் இருந்து இளைஞர்களை விடுவிக்கும் விதமாக நடிகர் […]
- திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் சிலம்பம் சுற்றிய மணமக்கள்..!கும்பகோணம் அருகே பாபநாசத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மணமக்கள் சிலம்பம் […]
- தஞ்சாவூரில் இயற்கை மாற்றுப் பொருள் கண்காட்சி..!தஞ்சாவூரில் பிளாஸ்டிக் பொருள்களுக்கு மாறாக இயற்கை மாற்றுப் பொருள் கண்காட்சி நடைபெற்று வருகின்றன.தமிழகத்தில் ஒருமுறை பயன்படுத்தப்படும் […]
- நெல்லையில் ஹெல்மெட் அவசியம் குறித்து விழிப்புணர்வு பேரணி..!நெல்லையில் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.திருநெல்வேலி மாநகர காவல் துறை, கோபாலசமுத்திரம் […]
- 8ம் வகுப்பு மாணவர் ஜம்பிங் ஜாக்ஸ் செய்து உலக சாதனை முயற்சிராஜபாளையத்தை சேர்ந்த 8ம் வகுப்பு மாணவர் மணிகண்டன் தொடர்ச்சியாக இரண்டு மணி நேரம் ஜம்பிங் ஜாக்ஸ் […]
- பேராபத்தை சந்திப்போம்-ரியல் எஸ்டேட் மாநாட்டில் சத்குரு பேச்சு!“குறைந்த நிலப்பரப்பும், அதிகப்படியான மக்கள் தொகையும் கொண்ட நம் நாட்டில் கடந்த காலங்களை போல் கட்டுமானங்கள் […]
- மதுரை மெட்ரோ திட்டம்- எஸ்எம்எஸ் அனுப்பிய தமிழக அரசுமதுரை மக்களுக்கு 8,500 கோடி மதிப்பீட்டில் மெட்ரோ ரயில் திட்டம் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் எஸ்எம்எஸ் மூலமாக […]
- அதானி பற்றி பேசினால் அது தேச துரோகமா.? மதுரை விமான நிலையத்தில் கே எஸ் அழகிரி பேட்டி..மதுரையில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே […]
- இந்தியாவிலேயே அதிக கோயில்கள் கொண்ட மாநிலங்களில்..
முதலிடம் பெற்றுத் திகழ்வது தமிழ்நாடுதான்..!இந்தியாவிலேயே அதிக கோயில்கள் கொண்ட மாநிலங்களில் முதலிடத்தில் இருப்பது தமிழ்நாடுதான் என்பது தமிழர்களுக்கு கிடைத்த பெருமை […] - லைஃப்ஸ்டைல்உடற்பருமனும் அதனைக் குறைக்கும் வழிகளும்: