மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு பாரதிய கிசான் சங்கம் சார்பில் 10 அம்ச கோரிக்கையை கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தேங்காய் உற்பத்தி நெருக்கடியை சந்தித்து வரும் நிலையில் கொப்பரைக்கு கிலோ ஒன்றுக்கு 150 ரூபாய் அறிவிக்கவும், ஒரு லிட்டர் பால் உற்பத்திக்கு 52 ரூபாயகவும் மற்றும் மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று வேளாண் சட்டத்தினை திரும்ப பெறவேண்டும் போன்ற கோரிக்கைகள் வைத்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.