சாலையை கடந்த போது லாரி மோதி மில் தொழிலாளி பலி.!!
கேரளா மாநிலத்தைச் சேர்ந்த மேக்கி (வயது 23) இவர் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள சீத்தப்பட்டி பிரிவில் உள்ள தனியார் ஸ்பின்னிங் மில்லில் தங்கி தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இன்று (வெள்ளிக்கிழமை) இரவு மில்லில் இருந்து அருகே உள்ள அய்யர்மடம்…
உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற ரூ.84,600 பறக்கும் படையினர் பறிமுதல்..,
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள சேனன்கோட்டையில் ஒட்டன்சத்திரம் சாலையில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது வேடசந்தூரில் இருந்து ஒட்டன்சத்திரம் நோக்கி சென்ற காரை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அப்போது காரில் வேடசந்தூரை சேர்ந்த தொழிலதிபர் ஜமாலுதீன்…
வட்டாட்சியர் அலுவலகத்தில் பொதுமக்களுக்கு வாக்குரிமை குறித்து விழிப்புணர்வு..,
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட குஜிலியம்பாறை வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் நந்தகோபால் தலைமையில் சட்டசபை தேர்தலை முன்னிட்டு ரங்கோலி கோலம் மூலமாக பொதுமக்களுக்கு வாக்குரிமையின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் பங்கேற்று கோலமிட்டும்…
எரியோடு பகுதியில் மதுவிற்ற 2 பேர் கைது;134 மதுபாட்டில் பறிமுதல்..,
வேடசந்தூர் அருகே உள்ள எரியோடு பகுதியில் அனுமதி இன்றி மதுவிற்ற 2 பேரை கைது செய்து 134 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள ஏரியோடு போலீஸ் இன்ஸ்பெக்டர் மலையரசி தலைமையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆரோக்கிய…
அரசு கலை அறிவியல் கல்லூரியில் தமிழ் இலக்கிய மன்ற விழா..,
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அரசு கலை மற்றும். அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை சார்பில் நூலக அரங்கில் தமிழ் இலக்கிய மன்ற விழா நடைபெற்றது. கல்லூரி முதல்வர் பிரேமா தலைமையேற்று பேசினார். தமிழ் துறை தலைவர் பாலுச்சாமி வரவேற்று பேசினார். அருள்மிகு பழனியாண்டவர்…
கேரளா மாட்டு வியாபாரிகள் கொண்டு வந்தரூ. 2.80 லட்சம் பறிமுதல்..,
வேடசந்தூர் அருகே கேரளா மாட்டு வியாபாரிகள் உரிய ஆவணம் இன்றி கொண்டு வந்த ரூ.2. 80 லட்சத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா வடபதுரை அருகே உள்ள தங்கம்மாபட்டி சோதனை சாவடியில் திண்டுக்கல் –…
பழனி ரோப்கார் சேவை 20 ம்தேதி ஒரு நாள் நிறுத்தம்..,
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில், மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக வரும் மார்ச் 20-ம் தேதி ரோப் கார் சேவை ஒரு நாள் மட்டும் நிறுத்தப்படுவதாகக் கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி முருகன் கோயிலுக்கு நாள்தோறும்…
குடிநீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடுவதால் பொதுமக்கள் கவலை..,
வேடசந்தூர் அருகே காவிரி கூட்டு குடிநீர் குழாய் உடைந்து குடிநீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடுவதால் பொதுமக்கள் கவலை அடைந்துள்ளனர். கரூர் காவிரி ஆற்றில் இருந்து தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் நீர் உந்து கிணறு அமைக்கப்பட்டு சக்தி வாய்ந்த மின்…
தொழில் அதிபர் காரில் கொண்டு வந்த ரூ 3 லட்சம் பறிமுதல்..,
குஜிலியபாறையில் காரில் உரிய ஆவணங்கள் இன்றி தொழில் அதிபர் கொண்டுவரப்பட்ட ரூ லட்சம் ரூபாய் பணம் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள குஜிலியம்பாறை தாசில்தார் நந்தகோபால் தலைமையில் தேர்தல் பறக்கும் படையினர்…
திமுக இளைஞரணி நகர அமைப்பாளரை பற்றி அவதூறு வீடியோ வெளியிட்ட பாஜக நிர்வாகி மீது புகார்..,
வேடசந்தூர் திமுக இளைஞரணி நகர அமைப்பாளரை பற்றி சமூக வலைதளங்களில் அவதூறு வீடியோ வெளியிட்டவர் பாஜக நிர்வாகி மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் திமுக இளைஞரணி நகர அமைப்பாளர்…




