கும்பகோணத்தில் தேர் எடை தாங்காமல் சாலை உடைந்தது. 110அடி உயரத்துடன் உலகிலேயே மிக உயரமான தேராக விளங்கும் கும்பகோணம் சாரங்கபாணி பெருமாள் திருக்கோயில் சித்திரை தேர் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. 500டன் எடையுடன் ஆசியாவிலேயே அதிக எடை கொண்ட தேராக இத்தேர் விளங்குவதால், இதன் பாரம் தாங்காமல் தேரோட்டத்தின் போது கும்பகோணம் மாநகர வீதி உடைந்தது. இருப்பினும் உடனக்குடன் புதிய சாலை போடப்பட்டு பின்னர் தேர் நிலையை வந்து அடைந்தது.