
சாத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கலைஞரின் கனவு இல்ல திட்ட பயனாளிகளுக்கு அரசாணை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் கலந்துகொண்டு 51 பயனாளிகளுக்கு கலைஞரின் கனவு இல்ல திட்ட அரசாணை வழங்கினார்.
இந்த திட்டத்தின் மூலம் ஒரு நபருக்கு மூன்று லட்சத்து 50 ஆயிரம் மானியத்தில் வீடு கட்டுவதற்கான பணி ஆணையினை அமைச்சர் கே கே எஸ் ஆர் ராமச்சந்திரன் பயனளிகளிடம் வழங்கினார். அது தொடர்ந்து பொதுமக்களிடமிருந்து மனுக்களையும் பெற்றார்.
இந்த நிகழ்ச்சியில் யூனியன் சேர்மன் மற்றும் சாத்தூர் சட்ட மன்ற உறுப்பினர் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
