• Mon. Jun 22nd, 2026
WhatsAppImage2026-06-18at2309102
previous arrow
next arrow
Read Now

பதக்கங்களை குவித்த மதுரை மாணவர்களுக்கு பாராட்டு விழா

Byp Kumar

Dec 5, 2022

எங் ஸ்போர்ட்ஸ் ஆஃப் இந்தியா நடத்திய போட்டிகளில் வெற்றி பெற்ற மதுரை மாணவர்களுக்கு பாராட்டு விழா.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் எங் ஸ்போர்ட்ஸ் ஆஃப் இந்தியா நடத்திய ஆசிய அளவிலான விளையாட்டு போட்டி கடந்த டிசம்பர் 23ஆம் தேதி நடைபெற்றது. இங்கு நடைபெற்ற இந்த போட்டியில் சிலம்பம், கராத்தை, கிக் பாக்ஸிங் உள்ளிட்ட பல்வேறு வகையான போட்டிகளில் இந்தியா முழுவதும் இருந்து பல்வேறு மாநிலங்களில் இருந்து நூற்றுக்கு மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர் .

இந்த நிலையில் மதுரை மாவட்டம் ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த ராஜா மார்ஷியல் ஆர்ட்ஸ் அகாடமியை சேர்ந்த சுமார் 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்று 8 தங்கம் 11 வெள்ளி நான்கு வெங்கலங்கல பதக்கங்களை வென்றனர் சிறப்பாக விளையாடி பதக்கங்களை வென்ற மாணவர்களுக்கு ஒத்தக்கடை ஊராட்சி மன்ற தலைவர் முருகேஸ்வரி சரவணன் மற்றும் பயிற்சியாளர் பத்ரி நாராயணன் ஆகியோர் பாராட்டுகளை தெரிவித்தனர்.