அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஊழல்வாதி என்று பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று கடலூரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசினார். அவரின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து கடலூர் மாநகர திமுக செயலாளர் கே.எஸ்.ராஜா தலைமையில் அண்ணாமலையின் உருவபொம்மை புகைப்படங்கள் எரிக்கப்பட்டது. அப்போது அமைச்சர்கள் ப த்திரிக்கையாளர்களை அவமரியாதையாக பேசும் துரோகி அண்ணாமலை ஒழிக ஒழிக என்று அவர்கள் கோஷமிட்டனர்.