பாமகவின் புதிய தலைவராக அன்புமணி அண்மையில் பொறுப்பேற்றுக் கொண்டார். இதையடுத்து தமிழக முதல்வர் ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி மற்றும் வைகோ உள்ளிட்டோரை சந்தித்து இருந்தார். இந்நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்தை என்று அன்புமணி நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார். திமுக தலைவர் விஜயகாந்தை அவரது இல்லத்திற்குச் சென்று சந்தித்தார்.
அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அன்புமணி,விஜயகாந்த் தமிழக அரசியலில் தைரியமாக மக்களை திரட்டி அரசியல் நடத்தி வருகின்றார். அவர் மீது எனக்கு எப்போதும் தனிப்பட்ட மரியாதை உள்ளது. இது நட்பு ரீதியான சந்திப்பு என்று கூறியுள்ளார். தமிழக அரசியலில் எதிரெதிர் துருவங்களாக இருக்கும் இரு கட்சியை சேர்ந்த தலைவர்களும் நேரில் சந்தித்துக் கொண்டது கட்சி தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.