• Thu. Apr 25th, 2024

ஒரத்தநாடு பேரூராட்சியை கைப்பற்றிய அமமுக..!

Byகாயத்ரி

Feb 22, 2022

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு, இன்று முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கிறது.அந்த வகையில் தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு பேரூராட்சியை அமமுக
கைப்பற்றியுள்ளது. மொத்தம் உள்ள 16 வார்டுகளில் அமமுக 9, இடங்களிலும் அதிமுக 3 இடங்களிலும், திமுக ஒரே ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. மக்கள் செல்வாக்கு பெற்ற இரண்டு பெரிய கட்சிகளை பின்னுக்கு தள்ளி அமமுக வெற்றிவாகை சூடியுள்ளது. இதனால் டிடிவி தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *