மீனாட்சியம்மன் திருக்கல்யாணம், சித்திரை திருவிழா என மதுரை மாநகரமே திருவிழாக் கோலம் பூண்டுள்ள நிலையில், பக்தர்களுக்கு செய்ய வேண்டிய அடிப்படை வசதிகள் குறித்த பட்டியலை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கியுள்ளது பாஜக.
மதுரை மாவட்ட ஆட்சியர் அனிஷ் சேகரை நேரில் சந்தித்த மதுரை மாவட்ட பாஜக தலைவர் டாக்டர் சரவணன், பக்தர்களிடம் வசூலிக்கப்படும் கட்டணத்தை குறைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளார்.
இதேபோல் கோவிலுக்குள் செல்போன் கொண்டு செல்ல விதிக்கப்படுள்ள தடையை மறுபரிசீலனை செய்யுமாறும் கேட்டுக்கொண்டார்.
ஆண்டுதோறும் சித்திரை மாதம் வந்துவிட்டாலே மதுரை மாநகரம் முழுவதும் திருவிழாக் கோலம் பூண்டுவிடும். மீனாட்சியம்மன் திருக்கல்யாணம், சித்திரை திருவிழா என வரிசையாக நிகழ்ச்சிகளும், வாண வேடிக்கைகளும் மதுரையை களை கட்ட வைத்துவிடும். இந்நிலையில் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தருவது தொடர்பாக மாவட்ட நிர்வாகத்திற்கு பாஜக தரப்பில் கோரிக்கை பட்டியல் ஒன்று வழங்கப்பட்டுள்ளது.
அதில், மீனாட்சியம்மன் திருக்கல்யாணம் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள ரூ.200 முதல் ரூ.500 வரை வசூலிக்கப்படும் கட்டணத்தை குறைக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. அதேபோல் கட்டிமுடிக்கப்பட்ட வாகன நிறுத்துமிடத்தை உடனடியாக பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு பக்தர்களுக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளதால் லட்சக்கணக்கானோர் திரள்வார்கள் என்றும் எனவே அதற்கேற்ப பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகளை இப்போதே கட்டமைக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
மதுரை மீனாட்சியம்மன் கோவில் வடக்கு கோபுர வாசலில் பொங்கல் வைப்பதற்கும் மொட்டை போடுவதற்கும் அனுமதி தர வேண்டும் என பாஜக மாவட்ட தலைவர் சரவணன் மாவட்ட ஆட்சியரிடம் வலியுறுத்தியுள்ளார். குடிநீர் வசதி, மொபைல் கழிப்பறை வசதி, கூடுதல் காவலர்கள் பணியமர்த்துவது, CCTV நிலையங்கள் அதிகப்படுத்துவது, தீ விபத்தில் சேதமடைந்த வசந்தராயர் மண்டபத்தை புனரமைப்பது, அவசர மருத்துவ உதவி போன்ற அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவது தொடர்பாகவும் அவர் அளித்துள்ள கோரிக்கை மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நான்கு மாசி வீதிகளிலும் மின்கம்பிகளை தரை பகுதியில் கொண்டு செல்வது உள்ளிட்ட பணிகள் நிறைவடைந்தும் இன்னும் செயல்படுத்தப்படாமல் இருப்பதாகவும் அதனை பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் எனவும் பாஜக மாவட்ட தலைவர் சரவணன் கோரிக்கை விடுத்துள்ளார். இதனைக் கேட்டுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் பரிசீலனை செய்வதாக உறுதியளித்திருக்கிறார்.
- சதுரகிரிக்கு பக்தர்கள் செல்ல 4 நாட்கள் அனுமதிபங்குனி மாத பிரதோஷம் மற்றும் பவுர்ணமி முன்னிட்டு சதுரகிரிக்கு பக்தர்கள் செல்ல 4 நாட்கள் அனுமதிவழங்கி […]
- தமிழகத்தில் பிரிக்கப்படும் மாவட்டங்களின் பட்டியல்தமிழகத்தில் புதிதாக 8 மாவட்டங்கள் உருவாக்கப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்தமிழகத்தில் மேலும் 8 […]
- இன்று தமிழ்நாடு முழுவதும் சுங்க கட்டணம் உயர்வு..!ஏப்ரல் முதல் நாளான இன்று முதல் தமிழ்நாடு முழுவதும் 29 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.தமிழ்நாட்டில் உள்ள […]
- உதகை ஸ்ரீராஜராஜேஸ்வரி கோயிலில் அலங்கார உபாய திருவீதி உலாஉதகை ஸ்ரீராஜராஜேஸ்வரி கோயிலில் பனிரெண்டாம் நாள் ஸ்ரீராஜராஜேஸ்வரி அம்மன் அலங்காரத்தில் திருவீதி உலா நடைபெற்றது.உதகை தாசபளஞ்சிக […]
- அதிரடியாக குறைந்த சிலிண்டர் விலை!!இன்று வணிக பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டர் விலை அதிரடியாக விலை குறைந்துள்ளது. சர்வதேச அளவில் கச்சா […]
- மதுரை காமராஜர் பல்கலை . பேராசிரியர் வன்கொடுமை சட்டத்தில் கைதுமதுரை காமராஜர் பல்கலைகழகத்தில் மாணவிகளிடம் தரக்குறைவாக பேசிய வரலாற்றுத் துறை பேராசிரியர் வன்கொடுமை சட்டத்தில் கைதுமதுரை […]
- இலக்கியம்நற்றிணைப் பாடல் 150: நகை நன்கு உடையன் பாண நும் பெருமகன்மிளை வலி சிதையக் களிறு […]
- ஆருத்ரா கோல்டு நிறுவன மோசடி பாஜக நடிகர் ஆர்.கே.சுரேஷ் வெளிநாடு தப்பி ஓட்டம்ஆருத்ரா கோல்டு நிறுவனம் ரூ.2438 கோடி மோசடி செய்த வழக்கில் திடீர் திருப்பமாக நடிகரும், பாஜக […]
- படித்ததில் பிடித்ததுசிந்தனைத்துளிகள் நிபந்தனையற்ற அன்பு! ஏழை சிறுவன், பசியால் ஒரு வீட்டின் கதவைத் தட்டினான்.கதவைத் திறந்த இளம்பெண், […]
- பொது அறிவு வினா விடைகள்
- இன்று முட்டாள் தினம் -ஒருவரை அறிவாளி /முட்டாள் என தீர்மானிப்பது யார் ?உலகம் முழுதும் “April Fools Days” என்று இன்றளவும் மக்கள் ஒருவரையொருவர் முட்டாளாக்கி கொண்டு மகிழ்ச்சியோடு […]
- குறள் 415இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றேஒழுக்க முடையார்வாய்ச் சொல்.பொருள் (மு.வ):கல்லாதவன் ஒழுக்கமுடைய சான்றோரின் வாய்ச் சொற்கள், வழுக்கல் […]
- சோழவந்தான் ரயில்வே மேம்பாலத்தை உடனடியாக திறக்க வேண்டும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கைபணிகள் நிறைவு பெற்ற நிலையில் மதுரை மாவட்டம் சோழவந்தானில் ரயில்வே மேம்பாலத்தை உடனடியாக திறக்க சமூக […]
- திருப்பரங்குன்றம் கோயிலில் அன்ன வாகனத்தில் முருகன், தெய்வானை எழுந்தருளி அருள்பாலித்தார்..!திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் பங்குனி மூன்றாவது நாள் திருவிழாவில் அன்ன வாகனத்தில் முருகன் தெய்வானை […]
- எல்லோரும் சமம் என்பதை தெரியபடுத்துவது தான் தியேட்டர்கள்-நடிகர் சூரி பேட்டிஎல்லோரும் சமம் என்பதை தெரியபடுத்துவது தான் தியேட்டர்கள், ரோகினி திரையரங்க சம்பவம் வருத்தமளிக்கிறது, எந்த சூழலில் […]