நாமக்கல் மாவட்டத்தில் நாமக்கல், ராசிபுரம், குமாரபாளையம், திருச்செங்கோடு, பள்ளிப்பாளையம் ஆகிய நகராட்சிகள் மற்றும் 19 பேரூராட்சிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் பெரும்பான்மையான இடங்களை ஆளுங்கட்சியான திமுக கைப்பற்றியுள்ளது.
இதில், மிகவும் முக்கியமான நகராட்சியாக பார்க்கப்பட்ட குமாரபாளையம் நகராட்சியை கைப்பற்ற திமுக மற்றும் அதிமுகவினர் இடையே கடும் போட்டி நிலவியது காரணம், முன்னாள் அமைச்சரும், அதிமுக மூத்த தலைவருமான தங்கமணியின் சட்டமன்ற தொகுதி என்பதால் எப்படியாவது தக்க வைக்க அதிமுகவும், அதனை முறியடிக்க திமுக வியூகம் வகுத்து செயல்பட்டு வந்தன.
இந்த நிலையில், குமாரபாளையம் நகராட்சியில் மொத்தமுள்ள 33 வார்டுகளில், தி.மு.க 14 இடங்களையும், அ.தி.மு.க 10 இடங்களையும், சுயேச்சைகள் 9 இடங்களையும் கைப்பற்றினர். இதனால், தி.மு.க, அ.தி.மு.க என இரண்டு கட்சிகளுக்கும் பெரும்பான்மை இல்லாததால், இரண்டு தரப்பும் சுயேச்சைகளிடம் பல லட்சங்களில் குதிரை பேரம் நடத்தியது.
இந்த பரபரப்பான சூழலுக்கு இடையே கடந்த 4-ம் தேதி நடந்த நகர் மன்ற தலைவருக்கான மறைமுக தேர்தலில் 31-வது வார்டில் வெற்றி பெற்ற சுயேச்சை கவுன்சிலர் விஜய கண்ணனும், திமுக சார்பில் 8-வது வார்டில் வெற்றி பெற்றச் சத்தியசீலனும் போட்டியிட்டனர்.
இதில், அதிமுகவைச் சேர்ந்த 1வது வார்டு உறுப்பினர் ரேவதி, 17வது வார்டு உறுப்பினர் நந்தினி தேவி ராஜகணேஷ் மற்றும் 16-வது வார்டு உறுப்பினர் பூங்கொடி வெங்கிடு உள்ளிட்டோர் அதிமுக நகர செயலாளர் ஏ.கே.நாகராஜன் அறிவுறுத்தலின் பேரில் சுயேச்சை வேட்பாளர் விஜய கண்ணனுக்கு வாக்களித்து அவரை வெற்றி பெற செய்தனர்.
இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதை அடுத்து, அதிமுக தலைமைக் கழகம் இன்று அதிமுக நகர செயலாளர் ஏ.கே.நாகராஜன் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் அவரது கணவர்கள் உட்பட 7 பேரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கி உத்தரவிட்டனர்.
கடந்த 20 ஆண்டுகளாக தொடர்ந்து அதிமுக நகரச் செயலாளராக இருந்த நாகராஜன் அதிமுக கட்சியை ஒரு கோடி ரூபாய் விலை பேசி விற்றதாகவும், இதற்கு உடனடியாக அதிமுக தலைமை உரிய நடவடிக்கை எடுத்ததற்கு கோடான கோடி நன்றிகள் எனக்கூறி பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.
- தனி விமானம் மூலம் சென்னை வந்தடைந்தார் பிரதமர் மோடி…ஹைதராபாத்திலிருந்து தனி விமானம் மூலமாக பிரதமர் நரேந்திர மோடி சென்னை வந்தடைந்தார். அவரை அமைச்சர் துரைமுருகன், […]
- வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் ரூ.35.000 சம்பளத்தில் 26 காலிப்பணியிடங்கள் ..தென்னிந்திய பல மாநில விவசாய கூட்டுறவு சங்கம் (SIMCO) வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் […]
- சென்னைக்கு ஒரு நாள் பயணம்… நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்பு…பிரதமர் மோடி இன்று ஒரு நாள் பயணமாக சென்னை வருகிறார். சென்னையில் உள்ள நேரு உள் […]
- ஸ்மார்ட்போன் டேட்டா பயன்பாட்டில் இந்தியா முதலிடத்தில் உள்ளது- பிரதமர் மோடி பெருமிதம்உலகின் அளவில் ஸ்மார்ட் போன் டேட்டா பயன்பாட்டில்இந்தியா முதலிடத்தில் உள்ளது- பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார்.ஐதராபாத்தில் […]
- ஜூன் 23ம் தேதி இடைத்தேர்தல்: தேர்தல் ஆணையம் தகவல்காலியாக உள்ள நாடாளுமன்ற, சட்டமன்ற தொகுதிகளுக்கு அடுத்த மாதம் 23ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என […]
- மதுரை மேயரை முற்றுகையிட்ட பொதுமக்கள்!மதுரை துர்கா காலனியில் அடிப்படை வசதிகேட்டு மேயர் காரை முற்றுகையிட்ட பொதுமக்களால் பரபரப்பு ஏற்பட்டது.மதுரை 97 […]
- டிகிரி முடித்தவரா நீங்கள்? தேசிய அனல்மின் நிறுவனத்தில் வேலை ரெடிதேசிய அனல் மின் நிறுவனம் (NTPC Limited ) இந்தியாவில் உள்ள மிக பெரிய அரசுக்கு […]
- 12 ஆண்டுக்கு பின் இன்று மேற்கே திரும்பும் கிழக்கே போன ரயில்போடி ரயில் பாதையை அகல ரயில் பாதையாக மாற்ற ,கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு கிழக்கே […]
- எலிசபெத் ராணியின் நினைவாக மிகப் பெரிய தங்க நாணயம் வெளியீடு…பிரிட்டன் எலிசபெத் மகாராணி முடிசூட்டப்பட்டு 70 ஆண்டுகள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. பிரிட்டன் நாட்டில் எலிசபெத் ராணி […]
- நடிகர் போண்டாமணிக்கு திடீர் உடல்நலக்குறைவு…பிரபல நகைச்சுவை நடிகர் போண்டாமணி திடீர் உடல்நலக்குறைவு காரணமாக ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். […]
- மதுரையில் மாநில அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்மாநில அரசை கண்டித்து பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய மாநில அரசு மற்றும் பொதுத்துறை சங்கங்களின் […]
- நவம்பர் 1 ஆம் தேதி மீண்டும் உள்ளாட்சி தினமாக கொண்டாடப்படும்…தமிழகத்தில் நவம்பர் 1 ஆம் தேதி மீண்டும் உள்ளாட்சி தினமாக கொண்டாடப்படும் என அறிவித்த தமிழக […]
- பள்ளி மாற்றுச்சான்றிதழில் தாய்மொழி – சீமான் பெருமிதம்நாம் தமிழர் கட்சி மேற்கொண்ட தொடர் முயற்சியின் விளைவாக இனி பள்ளி மாற்றுச்சான்றிதழில் தாய்மொழி குறித்த […]
- மதுரை ஆவினில் முறைகேடு- 30 பேரிடம் விசாரணைஆவினில் நடந்த முறைகேடுகள் குறித்து 30 பேரிடம் நேரில் அழைத்து விசாரணை செய்யப்பட்டுள்ளது.மதுரை ஆவினில் கடந்த […]
- உலக முழுவதும் வேகமாக பரவி வரும் குரங்கு அம்மைஉலகம் முழுவதும் 215 பேர் குரங்கம்மை வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதாரஅமைப்பு தகவல் தெரிவித்துள்ளது.கொரோனா தொற்று […]