விருதுநகர் மத்திய மாவட்டம் அமமுக வழக்கறிஞர் பிரிவு மாவட்ட செயலாளராக வழக்கறிஞர் M. ஜெகதீசன், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நியமித்துள்ளார்.
வழக்கறிஞர் M. ஜெகதீசன் முதலில் அதிமுகவின் இளைஞர் பாசறை ஒன்றிய செயலாளராக இருந்து பின் அமமுக துவங்கிய பிறகு அமமுகவில் இணைந்தார். அதன் தொடர்ச்சியாக அமமுகவில் இளைஞர் பாசறை மாவட்ட செயலாளராகவும் பணிப்புரிந்தார்.
இவர் தன் களப்பணியை 1999-ல் அதிமுகவில் தொடங்கி இப்போது அமமுக வழக்கறிஞர் பிரிவு மாவட்ட செயலாளராக தற்போது டிடிவி தினகரனால் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக இருந்து விருதுநகரின் மத்திய மாவட்டங்களிலும் வழக்கறிஞராகவும் பணிப்புரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.