ஒசூர் மாநகராட்சியை கைப்பற்ற திமுக-அதிமுக இடையே கடும் போட்டி நிலவுகிறது. பெரும்பான்மை பலத்தை நிருபிக்க பெரும் முயற்சியில் இரு கட்சிகளும் ஈடுபட்டுள்ளதால் தங்களது மாமன்ற உறுப்பினர்கள் அதிமுகவினர் கர்நாடகா மாநிலத்திற்கும் திமுக மாமன்ற உறுப்பினர்களை கேரள மாநிலத்திற்கும் உரியமுறையில் கவனித்து சொகுசு பேருந்தில் அழைத்துச் செல்லப்பட்டனர்.
ஒசூர் மாநகராட்சி தேர்தல் முடிவுகள் பிப். 22-இல் அறிவிக்கப்பட்டது. 45 வார்டுகளில் திமுக 21 வார்டுகளில் வெற்றி பெற்றது.
அதிமுக 16 வார்டுகளில் வெற்றி பெற்றது. காங்கிரஸ், பாஜக , பாமக, தலா ஒரு வார்டுகளிலும் சுயேட்சைகள் 5 பேர் வெற்றி பெற்றனர். பாமக சார்பில் வெற்றி பெற்ற காந்திமதிகண்ணன் வெற்றி பெற்ற கையோடு நேராகச் சென்று திமுகவில் இணைந்தார். இதனால் திமுகவின் பலம் 22 ஆக உயர்ந்தது.
அதனைத்தொடர்ந்து சுயேச்சைகள் 5 பேரும் திமுகவில் இணைந்தனர். இதனால் திமுகவின் பலம் 27 ஆனது. காங்கிரஸ் உறுப்பினர் ஒருவர் என சேர்த்து 28 பேரும் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினை வியாழக்கிழமை நேரில் சென்று வாழ்த்து பெற்றனர். வாழ்த்து பெற்ற கையோடு ஒசூர் வருவார்கள் என எதிர்பார்த்த நிலையில் அவர்கள் கேரளாவிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
மாமன்ற உறுப்பினராக பதவி ஏற்கும் மார்ச் 2-ஆம் தேதி ஒசூர் திரும்புவார்கள் என தெரிகிறது. அதே நிலையில் 16 உறுப்பினர்களை கொண்ட அதிமுக மாமன்ற உறுப்பினர்களை அதிமுக கட்சியினர் கர்நாடக மாநிலம் மைசூருக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
அவர்களுக்கு ஆதரவாக பாஜக உறுப்பினர் ஒருவர் உள்ளார். மேலும் சில எதிர்க்கட்சிகளை சேர்ந்த மாமன்ற உறுப்பினர்களை இழுத்து அதிமுகவினரும் ஒசூர் மாநகராட்சியை கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். மேயர் பதவியை பிடிக்க 23 உறுப்பினர்களின் ஆதரவு தேவை.
ஒசூரில் நடைபெற்ற தனியார் மருத்துவ கல்லூரிகள் திறப்பு விழாவில் கலந்துகொள்ள செவ்வாய்கிழமை ஒசூர் வந்த ஓ பன்னீர்செல்வம் ஒசூர் ஹில்ஸ் சொகுசு உணவகத்தில் கூடுதலாக ஒரு நாள் தங்கி ஒசூர் மாநகராட்சியை அதிமுக மாமன்ற உறுப்பினர்களிடம் ஆலோசனைகளும் வழங்கியதாகக் கூறப்படுகிறது.
கடந்த 2006-ல் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் ஒசூர் நகராட்சியை கைப்பற்றும் போட்டியில் ஏற்பட்ட திடீர் மாற்றத்தை கவனத்தில் கொண்டு தற்பொழுது இரு கட்சிகளும் தங்களது மாமன்ற உறுப்பினர்களை தனித்தனியாக அழைத்து சென்றுள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.
கடந்த 2006-ல் 30 உறுப்பினர்களை கொண்ட ஒசூர் நகரமன்ற தலைவர் தேர்தலில் அதிமுகவுக்கு 7 உறுப்பினர்களே இருந்த நிலையில் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் ஆதரவோடு 17 வாக்குகளை பெற்று அப்போது அதிமுகவில் இருந்த எஸ்.ஏ.சத்யா ஒசூர் நகரமன்ற தலைவராக தேர்வு செய்யப்பட்டார். திமுக கூட்டணிக்கு 23 உறுப்பினர்களின் ஆதரவு இருந்தும் பாமக வேட்பாளர் ஜெயப்பிரகாஷ் 14 வாக்குகளைப் பெற்று தோல்வி அடைந்தார்.
இந்த அனுபவத்தைக் கொண்டு இரு கட்சிகளும் தற்போது ஒசூர் மாநகராட்சி கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். ஒசூர் மாநகராட்சி மேயர் தேர்தல்
முடியும் வரை ஒவ்வொரு நிமிடமும் திக் திக் என பதற்றம் நீடித்து வருகிறது. திமுகவில் இருக்கும் சில உறுப்பினர்கள் அதிமுகவிற்கு வாக்களிக்க வாய்ப்பு உள்ளது.
அதேபோன்று அதிமுகவை சேர்ந்த பல உறுப்பினர்கள் திமுகவிற்கு வாக்களிக்கவும் வாய்ப்பு உள்ளதால் தேர்தல் முடியும் வரை பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. ஆனால் திமுகவிடம் இருபத்தி எட்டு மாமன்ற உறுப்பினர்கள் இருப்பதால் முன்னாள் எம்எல்ஏ எஸ்.ஏ சத்யா மேயர் ஆவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஒசூர் மாநாட்சியில் துணை மேயர் பதவியை காங்கிரஸ் கட்சி கேட்பதால் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இந்திராணி துணை மேயர் ஆகும் வாய்ப்பு உள்ளது.
- போலி 500 நோட்டுகள் எண்ணிக்கை அதிகரிப்பு – ரிசர்வ் வங்கி எச்சரிக்கை!போலி 500 நோட்டுகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் ரிசர்வ் வங்கி தகவல் பொதுமக்கள் கவனமாக இருக்க […]
- தமிழக அரசினுடைய அனுமதி பெறாமல் மேகதாது அணை கட்ட முடியாது -ஓபிஎஸ்அதிமுக ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதல்வருமான ஒ பன்னீர் செல்வம் சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை வந்தடைந்தார்அப்போது […]
- மெட்ரோ குடிநீர் லாரிகள் திடீர் ஸ்டிரைக்.. ஸ்தம்பித்தது சென்னைமெட்ரோ குடிநீர் லாரிகள் வேலை நிறுத்தப் போராட்டத்தால் கோடம்பாக்கம், தி.நகர், ஆர்.ஏ.புரம், மந்தைவெளி, கிரீன்வேஸ் சாலை, […]
- மதுரை விமான நிலைய சாலையில் 1 மணிநேரம் போக்குவரத்து பாதிப்புஅவனியாபுரம் ஜேஜே நகர் பகுதியில் சாலை,சாக்கடை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி 100க்கும் […]
- மல்யுத்த வீராங்கனை போராட்டம் குறித்து மதுரையில் அண்ணாமலை பேட்டிதமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சென்னையிலிருந்து இண்டிகோ மூலம் மதுரை விமான நிலையம் வந்தடைந்தார் மதுரை […]
- சதுரகிரிமலையில் நாளை முதல் 4 நாட்கள் சுவாமி தரிசனம் செய்வதற்கு அனுமதிவைகாசி விசாகம் மற்றும் வைகாசி மாத பௌர்ணமியை முன்னிட்டு நாளை பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்கு […]
- பொன்னியின் செல்வன் படம் வந்ததால செங்கோல் தந்ததாக கூறி ஏமாற்ற பார்க்கிறார்கள் – என்.ராம்அதிகார மாற்றத்துக்காக செங்கோல் தந்ததாக கூறுவது கட்டுக்கதை என்று மூத்த பத்திரிகையாளர் என்.ராம் தெரிவித்துள்ளார். செங்கோல் […]
- ஏற்காடு மலைப்பாதையில் 20 அடி ஆழத்தில் விழுந்து விபத்தில் சிக்கியர் மீட்பு!..சேலம் மாவட்டம் ஏற்காடு மலைப்பாதையில் நேற்று இரவு பயணித்தவர் 20 அடி ஆழத்தில் விழுந்து விபத்தில் […]
- சாராயத்தை உரமாக பயன்படுத்தும் விவசாயிகள்மத்திய பிரதேசத்தின் பல்வேறு கிராமங்களில் அதிக விளைச்சலுக்காக மதுவை தண்ணீரில் கலந்து பருப்பு பயிர்களின் மீது […]
- இன்று முதல் மறுகூட்டல், மறுமதிப்பீட்டுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்பிளஸ் தேர்வில் மறுகூட்டல் மறுமதிப்பூட்டுக்கு விண்ணபிக்கும் மாணவர்கள் இன்று முதல் விண்ணபிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.பிளஸ் 2 […]
- 3 கல்லூரிகள் அங்கீகாரம் ரத்து.. அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி!..திருச்சி, தருமபுரி மற்றும் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைகளின் அங்கீகாரம் அண்மையில் ரத்து செய்யப்பட்டது. இது […]
- சாதாரண குடிமகனை விண்வெளிக்கு அனுப்பிய சீனாதனது சொந்த முயற்சியில் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பி உள்ள 3-வது நாடு சீனா ஆகும். தற்போது […]
- செம்மொழி பூங்காவில் மலர் கண்காட்சிமுன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னையில் மலர் கண்காட்சி நடைபெறுகிறது.சென்னையில் 2ம் ஆண்டாக செம்மொழி […]
- 150 வயது வரை யாராவது வாழமுடியுமா?” – சரத்குமார் பதில்..!யாராவது 150 ஆண்டுகள் வாழ முடியுமா தனது பேச்சுக்கு சரத்குமார் புதிய விளக்கம் அளித்துள்ளார்.மதுரையில் நடைபெற்ற […]
- 500 மதுபானக் கடைகள் மூடல் – ஜுன் 3ல் அறிவிப்புதமிழகத்தில் 500 மதுக்கடைகளை மூடுவது குறித்த அறிவிப்பு ஜூன்3ல் வெளியாக உள்ளது. கலைஞர் பிறந்தநாள் நூற்றாண்டு […]