• Wed. Jun 7th, 2023

ஆளுநருடன் அதிமுக நிர்வாகிகள் சந்திப்பு..!

இன்று மாலை ஆளுநர் ஆர்.என்.ரவியை அதிமுக சட்ட ஆலோசனை குழு உறுப்பினர்களான முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், ஜெயக்குமார், பென்ஜமின் ஆகியோர் சந்தித்து .

சென்னை கிண்டியில் உள்ள ராஜ் பவனில் இன்று மாலை 4:30 மணியளவில் ஆளுநர் ஆர்.என்.ரவியை அதிமுக சட்ட ஆலோசனை குழு உறுப்பினர்களான முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், ஜெயக்குமார், பென்ஜமின் ஆகியோர் சந்தித்து பேசினர். இந்த சந்திப்பின்போது திமுகவின் தேர்தல் விதிமீறல்கள் குறித்து அதிமுக சட்ட ஆலோசனைக்குழு உறுப்பினர்கள் புகார் மனு அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. வரும் 19-ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஆளுநரை சந்தித்து பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *