அண்மையில் உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு நிலம், வீடு மற்றும் சொத்துகள் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதன்படி வீடு, நிலத்தை விற்க மற்றொருவருக்கு ‘பவர்(power of attorney)’ எழுதித் தந்தால், அதை எழுத்துப்பூர்வமாக ரத்து செய்யாதவரை, அந்த பவர் பத்திரத்தை கொண்டு சொத்தை பதிவுச் செய்ய முடியும் என்றும், அதற்கு அசல் பவர் ஆவணம் கூட தேவையில்லை, பிரதி இருந்தாலே போதுமானது என்றும், வாய்மொழியாக ரத்து செய்வது செல்லாது என்றும் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.