பழனிகோயிலுக்கு வரும் முதியோர், கைக்குழந்தையுடன் வரும் தாய்மார்களுக்கு தனி வின்ச்சில் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பழனி கோவிலுக்கு பக்தர்கள் செல்ல ரோப் கார், வின்ச் வசதி உள்ளது. விடுமுறை நாட்கள், திருவிழா காலங்களில் ஆயிரக்கணக்கானோர் பழனி கோவிலுக்கு வருவதால் அவற்றில் செல்ல பல மணி நேரம் காத்திருக்கும் நிலை ஏற்படுகிறது. இதனால் முதியோர், கைக்குழந்தையுடன் வரும் தாய்மார்கள் சிரமப்பட்டனர். எனவே தனி வின்ச்சில் செல்ல கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.