• Thu. May 9th, 2024

ஸ்ரீபெரும்புதூரில் நேரு குடும்பத்தைச் சேர்ந்தவர் போட்டியிட வாய்ப்பு

Byவிஷா

Feb 9, 2024

ஸ்ரீபெரும்புதூரில் நேரு குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் போட்டியிட அதிக வாய்ப்புள்ளதாக காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ முருகானந்தம் தெரிவித்துள்ளார்.
செங்கல்பட்டு வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் பேசிய ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளரான முன்னாள் எம்எல்ஏ முருகானந்தம், ‘‘டெல்லி மேலிடத்திடம், ஸ்ரீபெரும்புதூர், கன்னியாகுமரியில் வெற்றி பெறுவோம் என தெரிவித்துள்ளேன். எனவே, நேரு குடும்பத்தை சேர்ந்த ஒருவர் இந்த தொகுதியில் போட்டியிட அதிக வாய்ப்புள்ளது’’ என்றார். பல ஆண்டுகளாக ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதியை காங்கிரஸ் கட்சியினர் தொடர்ந்து கேட்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *