• Tue. Aug 11th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

கோவில்பட்டியில் காந்தி ஜெயந்தி விழா – காமராஜர் நினைவு தினம் அனுசரிப்பு.

ByM.maniraj

Oct 2, 2022

கோவில்பட்டியில் சமக சார்பில் காந்தி ஜெயந்தி விழா மற்றும் காமராஜர் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது
கோவில்பட்டியில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தூத்துக்குடி வடக்கு மாவட்டம் சார்பில் 154வது காந்தி ஜெயந்தி மற்றும் பெருந்தலைவர் காமராஜரின் 47 வது நினைவு நாளை முன்னிட்டு சமக வடக்கு மாவட்ட செயலாளர் எஸ் ஆர் பாஸ்கரன் தலைமையில்,மாநில மாணவரணி துணைச் செயலாளர் நட்சத்திர வெற்றி முன்னிலையில், மாநில துணை பொதுச்செயலாளர் சுந்தர் மகாத்மா காந்தி மற்றும் முன்னாள் முதல்வர் காமராஜர் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார், நிகழ்ச்சியில் நெல்லை தொகுதி செயலாளர் அழகேசன், கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னத்தம்பி, மேற்கு ஒன்றிய செயலாளர் ஆணிமுத்துராஜ், மாநில பொதுக்குழு உறுப்பினர் பூமி பாலகன்,மாநில செயற்குழு உறுப்பினர் முத்து கணேஷ் ,நகர மகளிர் அணி ரதிதேவி,நகர தொண்டரணி செயலாளர் சங்கர்,நகர அவைத் தலைவர் அய்யம்பெருமாள், ஒன்றிய வர்த்தக அணி துணைச் செயலாளர் அய்யாதுரை,கடலையூர் கிளைச் செயலாளர் முத்துகிருஷ்ணன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.