தமிழக முழுவதும் சென்னை ,கோவை உள்ளிட்ட பல இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
பயங்கரவாத அமைப்புக்கு நிதி திரட்டியது தொடர்பாக “பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா ” அமைப்பின் நிர்வாகிகளை மையப்படுத்தி இந்த சோதனை நடத்தப்படுவதாக சொல்லப்படுகிறது. நாடு முழுவதும் கேரளா உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட மாநிலங்களில் நடந்தப்பட்ட சோதனைகளில் 100க்கும் மேற்பட்ட பாப்புலர் ப்ரண்ட் நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.