• Wed. Apr 15th, 2026
WhatsAppImage2026-04-10at0716401
previous arrow
next arrow
Read Now

பீகாரில் மின்னல் தாக்கி உயிரிழந்தவர்களுக்கு 4 லட்சம் ரூபாய் நிவாரணம்

Byகாயத்ரி

Sep 20, 2022

பீகாரின் மூன்று மாவட்டங்களில் 11 பேரும், பூர்னியா மற்றும் அராரியாவில் தலா 4 பேரும், சுபாலில் 3 பேரும் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணத் தொகை வழங்கப்படும் என முதல்வர் நிதிஷ்குமார் அறிவித்துள்ளார். “மோசமான வானிலையில் கவனமாக இருங்கள். இடியுடன் கூடிய மழையிலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ள பேரிடர் மேலாண்மைத் துறையின் பரிந்துரைகளைப் பின்பற்றவும்” என்று பீகார் முதல்வர் ட்வீட் ஒன்றை பகிர்ந்துள்ளார்.