உத்தரபிரதேச ரயில் நிலையத்தில் பெண் ஒருவர் நூலிழையில் உயிர் தப்பிய வீடியோ வைரலாகி வருகிறது.உத்தரபிரதேச மாநிலம் ஃபிரோசாபாத் நகரில் உள்ள ரயில் நிலையத்தில் பெண் ஒருவர் நூலிழையில் உயிர் தப்பும் வீடியோ வைரலாகி வருகிறது. தண்டவாளத்தில் ரயில் வந்து கொண்டிருக்கும் நேரத்தில் அந்தபெண் தண்டவாளத்தை மிக அலட்சியமாக கடக்கிறார். அப்போது அங்கு ஓடி வரும் அதிகாரி ஒருவர் அந்த பெண்ணை கையை பிடித்து மேலே தூக்குகிறார். ரயில் பக்கத்தில் வரும் போது ஓடிச்சென்று பாட்டிலை எடுக்கிறார். இதனை பகிர்ந்து பலரும் அப்பெண்ணை கண்டித்து வருகின்றனர்.